தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடந்த சில நாட்களுக்கு முன் தனது மேனேஜரான ரேஷ்மா ஷெட்டியை அந்த பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கி அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் பாலிவுட் நடிகர் சல்மான் கான். அதற்கு காரணம் ரேஷ்மா ஷெட்டி, சல்மான் கானின் நிகழ்ச்சி நிரல்களை தனது வசதிப்படி தனிச்சையாக அமைத்து வந்தார் என்றும், இதன்மூலம் சல்மானை அவரது குடும்பத்தினரிடம் இருந்து தனிமைப்படுத்தும் வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டார் என்றும் சொல்லப்படுகிறது.
இதனால் சல்மான் கானின் குடும்பத்தினர் கூட சல்மான் கானை பார்ப்பதற்கு க்யூவில் நிற்கவேண்டிய நிலைமையை உருவாக்கினார் என்பதால் தன்னிடம் ஒன்பது வருடங்களாக மேனேஜர் ஆக இருந்த ரேஷ்மா ஷெட்டியையே தயவு தாட்சண்யம் பார்க்காமல் நீக்கி; இந்த அதிரடி நடவடிக்கையை சல்மான் எடுத்தார் என சொல்லப்பட்டது..
இந்த அதிர்ச்சி விலகுவதற்குள் அடுத்ததாக தனது பாதுகாவலர்களிலும் மூன்று பேரை வேலையை விட்டு நீக்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் சல்மான் கான்.. இந்த மூவரும் சல்மான் கானின் பெர்சனல் விஷயங்களை வெளியில் கசிய விட்டார்கள் என்றும், அதனால் சல்மான் கான் சில சங்கடங்களை சந்தித்தார் என்றும் சொல்லப்படுகிறது.. ஆனால் சல்மான் கானின் பாதுகாவலாரக முதலில் இருந்தே இருக்கும் அய்தே சேரா என்பவர் மட்டும் எப்போதும்போல சல்மானின் நம்பிக்கைக்குரியவராக பணியில் தொடர்கிறாராம். சல்மான் கானின் இந்த நடவடிக்கை மற்ற பாலிவுட் நடிகர்களையும் உஷார் படுத்தியுள்ளதாம்.