'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
பாலிவுட் நடிகை ரேகா 80-களில் பாலிவுட்டின் கனவு கன்னி. கவர்ச்சி நடிப்பால் கலக்கிக் கொண்டிருந்தார். ஒரு படத்தின் புரமோசனுக்காக பேட்டி அளித்துக் கொண்டிருந்தபோது திடீரென ஒரு நிருபர் "உங்கள் தந்தை யாரென்று கேட்க, தமிழ்நாட்டின் லெஜண்ட் காதல் மன்னன் ஜெமினி கணேசன்தான் என் தந்தை" என்று அறிவித்தார்.
பத்திரிக்கையாளர்கள் மிரண்டு போனார்கள். சென்னைக்கு தகவல் பறந்தது. சென்னை பத்திரிகையாளர்கள் ஜெமினி வீட்டை முற்றுகையிட்டனர். "பாலிவுட் நடிகை ரேகா நீங்கள் தான் அவர் தந்தை என்று கூறியிருக்கிறாரே?" என்று கேட்டபோது. ஆமாம் அதுக்கென்ன இப்போ... ரேகா என் மகள்தான் எனக்கும் புஷ்வல்லிக்கும் பிறந்தவர் தான் ரேகா" கேசுவலாக சொன்னார் ஜெமினி கணேசன். அதன் பின்னணி கதை இதுதான்.
புஷ்பவல்லி தெலுங்கு நடிகை. ஜெமினியின் மிஸ்.மாலினி படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். அப்போது ஜெமினி ஸ்டூடியோவில் காஸ்டிக் டைரக்டராக (நடிகர், நடிகைகளை தேர்வு செய்கிறவர்) இருந்தார் ஜெமினி கணேசன். மிஸ்.மாலினி படத்திற்கு புஷ்பவல்லியை தேர்வு செய்தவர் ஜெமினி கணேசன்தான். அதன்பிறகு சக்ரதாரி, சம்சாரம் படங்களில் நடித்தார். அப்போது புஷ்பவல்லி ஏற்கெனவே திருமணமான ஜெமினியை ஒரு தலையாக காதலித்தார். பின்னர் தன் காதலை அவரிடம் சொன்ன புஷ்பவல்லி காதலை ஏற்காவிட்டால் தற்கொலை செய்வேன் என்று மிரட்ட அவரது காதலை ஏற்றார் ஜெமினி கணேசன்.
அதன் பிறகு 4 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தவர்கள் கருத்து வேறுபாடால் பிரிந்தனர். இந்த 4 ஆண்டுகால வாழ்க்கையில் ரேகா, ராதா என்ற இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர். பின்னாளில் ரேகா பாலிவுட் நடிகையானார். இதுதான் ஜெமினி, புஷ்பல்லியின் கதை. ஜெமினி, சாவித்ரி கதை தனி.