ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா |
தமிழ் சினிமாவில் வில்லன்களுக்கென்று நட்சத்திர அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்தவர் பி.எஸ்.வீரப்பா. "சபாஷ் சரியான போட்டி..." என்ற அவர் வசனமும், அவரது வில்லத்தனமான சிரிப்பும் தமிழ் சினிமா இருக்கிற வரை இருக்கும். மகாதேவி, மன்னாதி மன்னன் வஞ்சிக்கோட்டை வாலிபன், படங்களில் ஹீரோவை விட வில்லன் பற்றி பேச வைத்தவர் வீரப்பா. பி.எஸ்.வி.பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி ஆனந்த ஜோதி, ஆலயமணி, ஆண்டவன் கட்டளை உள்பட ஏராளமான படங்களை தயாரித்தார். நடித்து சம்பாதித்த அனைத்தையும் தயாரிப்பில் இழந்தார்.
பி.எஸ்.வீரப்பாவின் மறைவிற்கு பிறகு அவரது மகன் பி.எஸ்.வி.ஹரிகரன் படங்கள் தயாரித்தார். மிச்சம் இருக்கிற சொத்துக்கள் அதில் கரைந்து போனது. இதனால் சினிமாவை விட்டு விலகிய ஹரிகரன் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார். தற்போது வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாத கொடூரமான வறுமையில் இருக்கிறார். வீட்டுக்காரர் வீட்டை காலி பண்ணச்சொல்லி வற்புறுத்த ரோட்டுக்கு வரவேண்டிய நிலை.
இந்த விஷயத்தை கேள்விப்பட்ட தயாரிப்பாளர் சங்க முன்னாள் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு. ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து அனுப்பி உதவியுள்ளார். மற்றவர்களின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறார் முதுமை அடைந்து விட்ட ஹரிகரன். மாபெரும் கலைஞர்களின் குடும்பங்கள் வறுமையில் வாடுவது என்பது தமிழ் சினிமாவின் தீராக சாபக்கேடாகவே இருக்கிறது.