'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இந்தியத் திரையுலகில் இதுவரை எந்த ஒரு படமும் முதல் நாளில் 100 கோடி ரூபாயை வசூலித்தது இல்லை. ஹிந்திப் படங்கள் கூட மூன்று, நான்கு நாட்களில்தான் 100 கோடி ரூபாயை வசூலிக்கும். இந்திய அளவில் முதல் நாளில் அதிக வசூலைப் பெற்ற படமாக 2014ம் ஆண்டு வெளிவந்த 'ஹேப்பி நியூ இயர்' படம் உள்ளது. இப்படத்தின் முதல் நாள் வசூல் 45 கோடி ரூபாய். முதல் வாரம், முதல் வார இறுதி வசூலில் 'சுல்தான்' படம் தான் 200 கோடி ரூபாய் வரை வசூலித்து முதலிடத்தில் உள்ளது.
இந்த இரண்டு வசூல் சாதனைகளையும் 'பாகுபலி 2' முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படம் முதலில் 6000க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது 8000 தியேட்டர்கள் வரை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், முதல் நாளிலேயே 'பாகுபலி 2' படம் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து இந்தியத் திரையுலகத்தில் புதிய சாதனையை நிகழ்த்தும் எனச் சொல்கிறார்கள்.
அப்படி ஒரு சாதனை நிகழ்ந்தால் அதை நிகழ்த்திய பெருமை ஒரு தெலுங்குப் படத்திற்கே கிடைக்கும். இருந்தாலும் பாலிவுட்டினர் இப்படி ஒரு முதல் சாதனையை ஹிந்திப் படம்தான் நிகழ்த்த வேண்டும் என்ற பொறாமையுடன் இருந்து கொண்டிருக்கிறார்கள்.