தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்ற பின் பிரச்சனை மேல் பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் தயாரிப்பாளர்களுக்கு நல்லது செய்ய முயற்சி எடுத்து வருகிறோம் என நிர்வாகிகள் சொல்லிக் கொண்டிருக்க மறுபக்கம் அவர்களுக்கு எதிராக புதுப்புதுப் பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றை தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என திரையுலகத்தினர் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த சில வருடங்களாக பெரிய படங்களே சரியாக ஓடாத நிலையில் பல சிறிய படங்கள் வந்த சுவடு கூடத் தெரியாமல் போய்விடுகின்றன. முதல் தர, இரண்டாம் தர நாயகர்கள் நடித்து வெளிவரும் படங்களின் விலை அதிகமாக இருப்பதால் வினியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பினர் தங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தைச் சமாளிக்க அவர்களும் புதிய திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளனர்.
சில வாரங்களுக்கு முன்பு இனி எம்.ஜி. முறையில் படங்களை வாங்கி வெளியிடப் போவதில்லை எனவும், அவுட்ரேட், சதவீத அடிப்படையில் மட்டுமே படங்களை வெளியிட முடிவு செய்துள்ளோம் என வினியோகஸ்தர்கள் முடிவெடுத்ததாகச் செய்திகள் வந்தன. இதை தயாரிப்பாளர்கள் ஏற்காவிட்டால் மே மாதம் முதல் படங்களை வெளியிடுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் போவதாகவும் வினியோகஸ்தர்கள் தரப்பில் முடிவெடுத்திருந்தார்கள்.
அதே சமயம், எம்.ஜி. முறையில் படங்களை வெளியிடுவதை நிறுத்தி வைக்கும் வினியோகஸ்தர்களின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தயாரிப்பாளர்கள் சங்கம் தரப்பில் மே மாதம் முதல் படங்களை வெளியிடுவதை நிறுத்தி வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால், மே மாதம் புதிய படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்படும் எனத் தெரிகிறது. மே மாதத்தில் 20 படங்கள் வரை வெளியீட்டிற்குத் தயாராக உள்ள சூழ்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கத்தினருக்கும், வினியோகஸ்தர்கள் தரப்பினருக்கும் இடையே எழுந்துள்ள இந்த விவகாரத்தால் புதிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் இரு தரப்பிலிருந்தும் இது பற்றிய அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.