வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் |
மறைந்த ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான என்கே.விஸ்வநாதனுக்கு கமல் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
1970-களில் ஒளிப்பதிவாளராக களமிறங்கிய என்.கே.விஸ்வநாதன். சட்டம் என் கையில், கடல் மீன்கள், மீண்டும் கோகிலா, சகாதேவன் மகாதேவன், தங்கமணி ரங்கமணி, பாண்டி நாட்டு தங்கம் உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். பிறகு இயக்குநராக இணைந்த கைகள், நாடோடி பாட்டுக்காரன், பெரிய வீட்டு பண்ணக்காரன், பெரிய மருது, ஜெகன் மோகினி போன்ற படங்களையும் இயக்கினார்.
சென்னை வளரசவாக்கத்தில் வசித்து வந்த விஸ்வநாதன் மாரடைப்பு காரணமாக நேற்று காலமானார். சென்னையில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அவருக்கு நடிகர் கமல்ஹாசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். கமல் தவிர்த்து சத்யராஜ், ராமராஜன், செந்தில், சங்கிலிமுருகன், பாண்டியராஜன், சேம்பர் செயலாளர் என்.ராமசாமி, டைரக்டர்கள் எஸ்.பி.முத்துராமன், புகழ்மணி, தயாரிப்பாளர் விஜயமுரளி, உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் என்கே விஸ்வநாதனின் உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு மயானத்தில் வைத்து இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டது.