ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
சிறைவாசத்திற்கு பிறகு சஞ்சய் தத் நடித்துள்ள முதல் படம் பூமி. ஓமங் குமார் இயக்கியுள்ளார். அப்பா - மகள் உறவை சொல்லும் பாசப்படமாக இந்த பூமி உருவாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் பூமி படத்தின் ஷூட்டிங் ஆரம்பமானது. இதில் சஞ்சய் தத் தனது ரோல் சம்பந்தப்பட்ட ஷூட்டிங்கை ஒரே மூச்சாக முடித்து கொடுத்துள்ளார். படத்தின் கடைசிநாள் ஷூட்டிங்கின் போது மிகவும் உணர்ச்சிகரமாக காணப்பட்டார்.
இதுகுறித்து பூமி படத்தை தயாரிக்கும் பூஷண் குமார் கூறியிருப்பதாவது... "பூமி படத்திற்காக சஞ்சய் தத் தன் ரோலை அவ்வளவு சிறப்பாக வடிவமைத்து கொண்டார். படத்திற்காக அவர் உழைத்த விதம், அவர் எடுத்த முயற்சிகள் அனைத்தையும் பார்த்து நான் மகிழ்ச்சி அடைந்தேன்" என்றார்.
சஞ்சய் தத் கூறும்போது... "படம் ஆரம்பித்த முதல்நாள் முதல் கடைசி நாள் சிறப்பான அனுபவமாக, நல்ல பயணமாக இருந்தது. படத்தை திரையில் காண ஆவலாய் இருக்கிறேன்" என்கிறார்.
பூமி படம் வருகிற செப்., 22-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.