ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகர் ராதாரவியின் சகோதரி மகன் ஐக், இயக்கி உள்ள படம் சங்கிலி புங்கிலி கதவ தொற. இதில் ராதாரவியும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் எம்.ஆர்.ராதா குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஏராளமாக கலந்து கொண்டனர். விழாவில் பேசிய ராதாரவி அவர்களை கலாயத்தார். அவர் பேசியது வருமாறு:
என் மகனை சினிமாவில் வரவைக்க ஆசைப்பட்டேன். சினிமாவில் நிறைய நன்றி கெட்டவர்கள் இருக்கிறார்கள் என்று நினைத்தானோ என்னவோ அவனுக்கு சினிமா பிடிக்கவில்லை. அப்பா ஒரு துறையில் இருந்தால் மகனும் அதே துறைக்கு வருவது தான் இயல்பு. இந்தி படமாக இருந்தாலும் சரி, மொழியாக இருந்தாலும் சரி எனக்கு ஆகாது. ஆனாலும் இந்தி படங்கள் எடுத்துக் கொண்டிருந்த பிரியதர்ஷனிடம் சகோதரி மகன் ஐக்கை சேர்த்து விட்டேன். பிறகு கமல்ஹாசனிடம் வேலை பார்த்தான். ஐக் கடுமையான உழைப்பாளி. இந்த படத்தை சிறப்பாக எடுத்துள்ளான்.
இங்கு எங்கள் குடும்பத்தினர் நிறைய பேர் வந்திருக்கிறார்கள். ஒரே திருட்டு முகமாக இருக்கிறது. நானும் ஒரு திருடன் தான். இந்தப் படம் கண்டிப்பாக ஹவுஸ்புல்லா ஓடும். தமிழ்நாடு முழுக்க அப்பா நடிகவேள் எம்.ஆர்.ராதா எங்கள் குடும்பத்துக்கு கிளைகளை திறந்து வைத்திருக்கிறார், அதனால் இந்த படம் பெரிய வெற்றி பெறும் என்றார் ராதாரவி.