வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
1943ம் ஆண்டு வெளிவந்த படம் மங்கம்மா சபதம். ஜெமினி எஸ்.எஸ்.வாசன் தயாரித்திருந்தார். ஆச்சார்யா இயக்கினார். ரஞ்சன், வசுந்தராதேவி, என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம், பி.ஏ.சுப்பையா உள்பட பலர் நடித்திருந்தனர்.
கலிங்க நாட்டின் இளவரசனான ரஞ்சன், பெரிய பெண் பித்தன். தனக்கு பிடித்தமான பெண்ணை கண்டுவிட்டால் அவர்களை அடையாமல் விடமாட்டான். அதே நாட்டில் வசிக்கும் ஏழைப்பெண் மங்கம்மா பேரழகி, நாட்டியத்திலும் கெட்டிக்காரி. ஒரு நாள் தன் புறாவை விரட்டிச் சென்றவள் தவறுதலாக அரண்மனைக்குள் சென்று விடுகிறாள். அவளை இளவரசன் ரஞ்சன் பார்த்து விடுகிறான். அவள் ஓடிவிடுகிறாள். அவள் அழகில் மயங்கிய ரஞ்சன் அவளை அடைய நினைக்கிறான். அவள் தோட்டத்தில் பூப்பறிக்கும்போது அவளை பலாத்காரம் செய்ய முயற்சிக்கிறான். அதிலிருந்து சாமர்த்தியமாக தப்புகிறாள் மங்கம்மா.
"உன்னை என் மனைவியாக்கி அடுத்த நிமிடமே வாழா வெட்டியாக்கி சிறையில் அடைப்பேன்" என்று ரஞ்சன் சபதம் விடுகிறார். "உனக்கே தெரியமால் உன் குழந்தையை பெற்று அந்த குழந்தை மூலம் உன்னை சவுக்கால் அடிப்பேன்" என்று மங்கம்மா சபதம் போடுகிறார்கள். மன்னர் மகன் என்கிற அதிகாரத்தை கொண்டு மங்கம்மாவை திருமணம் செய்யும் ரஞ்சன் மறுநாளே அவளை சிறையில் அடைக்கிறான்.
சிறையில் சுரங்கம் அமைத்து தப்பிக்கும் மங்கம்மா அதன் பிறகு கழைக்கூத்தாடியாக மாறி தனது நடனத்தின் மூலம் நாட்டையே கவர்ந்திழுக்கிறாள். அவளை பற்றி கேள்விப்படும் ரஞ்சன் கழைக்கூத்தாடியாக மாறியிருக்கும் மங்கம்மாவின் அழகில் மயங்கி அவளை தன் ஆசை நாயகியாக வைத்துக் கொள்கிறான். ரஞ்சனின் குழந்தைக்கு தாயாகிறாள் மங்கம்மா. தன் மகனை வளர்த்து மன்னனுக்கு எதிராக புரட்சி செய்து அவனை சவுக்கால் அடிக்க வைத்து தன் சபதத்தை நிறைவேற்றுகிறாள்.
இந்த கதை ஆபாசமானது என்று அப்போது கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழ் கலாச்சாரம் போய்விட்டது என்று விமர்சித்தார்க்ள. அதோடு படத்தில் வசுந்தராதேவி ரஞ்சனை மயக்குவதற்காக ஒரு மேற்கத்திய நடனம் ஆடியிருப்பார் அதுவும் கடும் விமர்சனத்துக்குள்ளானது. ஆனால் படம் பெரிய வெற்றி பெற்று வசூலை வாரிக்குவித்தது.