தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இந்தியாவின் குயில் என்று அழைக்கப்படும் பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர். மறைந்த தனது அப்பா தீனாநாத் மங்கேஷ்கர் நினைவாக ஆண்டுதோறும் சிறந்த கலைஞர்கள், சாதனையாளர்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறார். இந்த ஆண்டும் மும்பையில் விருது வழங்கும் நிகழ்ச்சியை நடத்தினார். பாலிவுட் நடிகர் ஆமீர்கான், இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், நடிகை வைஜயந்தி மாலா பாலி ஆகியோருக்கு இந்த ஆண்டு விருது வழங்கப்பட்டது.
கடந்த 16 ஆண்டுகளாக எந்த பொது மேடையிலும் எந்த விருதையும் பெற்றுக் கொள்ளாதவர் ஆமீர்கான். அரசு தவிர்த்த விருதுகளில் அவருக்கு நம்பிக்கை இல்லை என்று கூறிவந்தார். லதா மங்கேஷகருக்கு மதிப்பளித்து இந்த விழாவில் கலந்து கொண்டு தீனாநாத் மங்கேஷ்கர் விருதை பெற்றுக் கொண்டார். அவருக்கு விருதை வழங்கியது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேசிய தலைவர் மோகன் பகவத்.