'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
இந்தியாவின் குயில் என்று அழைக்கப்படும் பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர். மறைந்த தனது அப்பா தீனாநாத் மங்கேஷ்கர் நினைவாக ஆண்டுதோறும் சிறந்த கலைஞர்கள், சாதனையாளர்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறார். இந்த ஆண்டும் மும்பையில் விருது வழங்கும் நிகழ்ச்சியை நடத்தினார். பாலிவுட் நடிகர் ஆமீர்கான், இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், நடிகை வைஜயந்தி மாலா பாலி ஆகியோருக்கு இந்த ஆண்டு விருது வழங்கப்பட்டது.
கடந்த 16 ஆண்டுகளாக எந்த பொது மேடையிலும் எந்த விருதையும் பெற்றுக் கொள்ளாதவர் ஆமீர்கான். அரசு தவிர்த்த விருதுகளில் அவருக்கு நம்பிக்கை இல்லை என்று கூறிவந்தார். லதா மங்கேஷகருக்கு மதிப்பளித்து இந்த விழாவில் கலந்து கொண்டு தீனாநாத் மங்கேஷ்கர் விருதை பெற்றுக் கொண்டார். அவருக்கு விருதை வழங்கியது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேசிய தலைவர் மோகன் பகவத்.