இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தெலுங்கு சினிமாவின் பிதாமகனாக கருதப்படும் கே.விஸ்வநாத்துக்கு மத்திய அரசு திரைப்பட கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருதை அறிவித்துள்ளது. இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்து சொல்லி வருகிறார்கள். இந்த விருது அவருக்கு தாமதாக வழங்கப்பட்டிருப்பதாக சிரஞ்சீவி கருத்து தெரிவித்துள்ளார். விருது அறிவிக்கப்பட்ட கே.விஸ்வநாத்தை, அவரது இல்லத்தில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து சொன்னார் சிரஞ்சீவி. பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கே.விஸ்வநாத் மகத்தான படைப்பாளி, அவர் தெலுங்கு சினிமாவின் சொத்து. அவருக்கு தாதா சாஹேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் இந்த விருது அவருக்கு எப்போதோ வழங்கப்பட்டிருக்க வேண்டும். தாமதமாகத்தான் இப்போது அறிவித்திருக்கிறார்கள். ஆயினும் அதற்கான காரணத்தை தேட விரும்பவில்லை. இந்த தருணத்தில் அவருக்கு வழங்கப்பட்டிருப்பது பொருத்தமானது. விஸ்வநாத்துக்கு வழங்கப்பட்டிருப்பதால் தாதா சாஹேப் பால்கே விருது முழுமை அடைந்திருக்கிறது. அவருக்கு கிடைத்த விருதால் தெலுங்கு திரையுலகம் பெருமை கொள்கிறது. அவரது குடும்ப நணபர் என்ற முறையில் எங்கள் குடும்பமும் பெருமை கொள்கிறது. என்றார்.