ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு |
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், நடன இயக்குனர் என்பது லாரன்சின் சினிமா முகங்கள், ஆதரவு இல்லம் நடத்துகிறவர். ராகவேந்திராவுக்கு கோவில் கட்டி ஆன்மீக பணி செய்கிறவர். அம்மாவுக்கே கோவில் கட்டி வணங்குகிறவர். விவசாயிகள் பிரச்சினையா, ஜல்லிக்கட்டு பிரச்சினையா அனைத்துக்கும் முன் நிற்கிறவர் என்பது இன்னொரு முகம். தற்போது அவர் ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு பெண் குழந்தைகளை தத்தெடுத்து அடுத்து சேவையை தொடங்கியுள்ளார்.
சென்னையை சேர்ந்த ஸ்ரீனிவாசன், யத்ரி தம்பதிகளுக்கு லக்ஷன், லக்ஷிகா, லக்ஷயா, லக்ஷா என நான்கு பெண்குழந்தைகள். 3 வயதாகும் இந்த குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறந்தவை. தற்போது பள்ளிக்கு செல்லும் வயதுக்கு வந்திருக்கிறார்கள். தனியார் நிறுவனம் ஒன்றில் சொற்ப சம்பளத்தில் பணியாற்றும் ஸ்ரீனிவாசனால் குழந்தைகளை வளர்க்க முடியாமல் சிரமப்பட்டுள்ளார். இதுபற்றி தனது நண்பர்கள் மூலம் அறிந்த லாரன்ஸ் அவர்களை தனது அலுவலகத்துக்கு அழைத்து குழந்தைகளை தான் தத்தெடுத்துக் கொள்வதாக கூறினார். குழந்தைகளின் படிப்பு செலவு, திருமண செலவு உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் தான் ஏற்பதாக கூறினார். இதானல் அந்த தம்பதிகள் நெகிழ்ச்சியுடன் லாரன்சுக்கு நன்றி தெரிவித்தனர்.