ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், நடன இயக்குனர் என்பது லாரன்சின் சினிமா முகங்கள், ஆதரவு இல்லம் நடத்துகிறவர். ராகவேந்திராவுக்கு கோவில் கட்டி ஆன்மீக பணி செய்கிறவர். அம்மாவுக்கே கோவில் கட்டி வணங்குகிறவர். விவசாயிகள் பிரச்சினையா, ஜல்லிக்கட்டு பிரச்சினையா அனைத்துக்கும் முன் நிற்கிறவர் என்பது இன்னொரு முகம். தற்போது அவர் ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு பெண் குழந்தைகளை தத்தெடுத்து அடுத்து சேவையை தொடங்கியுள்ளார்.
சென்னையை சேர்ந்த ஸ்ரீனிவாசன், யத்ரி தம்பதிகளுக்கு லக்ஷன், லக்ஷிகா, லக்ஷயா, லக்ஷா என நான்கு பெண்குழந்தைகள். 3 வயதாகும் இந்த குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறந்தவை. தற்போது பள்ளிக்கு செல்லும் வயதுக்கு வந்திருக்கிறார்கள். தனியார் நிறுவனம் ஒன்றில் சொற்ப சம்பளத்தில் பணியாற்றும் ஸ்ரீனிவாசனால் குழந்தைகளை வளர்க்க முடியாமல் சிரமப்பட்டுள்ளார். இதுபற்றி தனது நண்பர்கள் மூலம் அறிந்த லாரன்ஸ் அவர்களை தனது அலுவலகத்துக்கு அழைத்து குழந்தைகளை தான் தத்தெடுத்துக் கொள்வதாக கூறினார். குழந்தைகளின் படிப்பு செலவு, திருமண செலவு உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் தான் ஏற்பதாக கூறினார். இதானல் அந்த தம்பதிகள் நெகிழ்ச்சியுடன் லாரன்சுக்கு நன்றி தெரிவித்தனர்.