அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் |
முதன் முறையாக தமிழ் நாட்டுக்குள் சினிமாவை கொண்டு வந்தவர் சாமிக்கண்ணு வின்சென்ட். திருச்சி பொன்மலை ரெயில்வே அதிகாரியான அவர் தனது உயர் அதிகாரி ஒருவரிடம் படம் காட்டும் எந்திரம் (புரொஜக்டர்) ஒன்றை வாங்கினார். வெளிநாடுகளில் இருந்து துண்டு படங்களை வரவழைத்து அதை ஊர் ஊராக சென்று போட்டுக்காட்டினார். அதன் பிறகு கோவையில் வெரைட்டி ஹால் என்ற நிரந்தர சினிமா தியேட்டரை கட்டினார். தமிழ்நாட்டில் முதன் முதலில் கட்டப்பட்ட தியேட்டர் அது.
சாமிக்கண்ணு பிறந்த நாளையொட்டி அன்றைய தினத்தை திரையரங்கு நாளாக சில அமைப்புகள் கொண்டாடி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கமலா தியேட்டரில் இந்த நிகழ்ச்சி நடந்தது. விழாவை நடத்திய அமைப்பின் நிர்வாகிகளான திருநாவுக்கரசு, செந்தில் நாயகம், ஆனந்த வரதராஜன் ஆகியோர் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் விஷாலை சந்தித்து புதிதாக கட்டப்பட இருக்கும் நடிகர் சங்கத்தில் சாமிக்கண்ணு உருவச்சிலையை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட விஷால் இதுகுறித்து செயற்குழுவில் பேசி சிலை அமைக்க ஏற்பாடு செய்கிறேன் என்றார்.