'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
தமிழ்ப் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த அஞ்சலி இங்கு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சென்னையிலிருந்து ஐதராபாத்திற்கு குடி பெயர்ந்தார். தெலுங்கிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்ததால் அங்கேயே தங்கிவிட்டார். தொடர்ந்து ஒரு சில பேய்ப் படங்களில் நடித்து வந்த அஞ்சலிக்கு அதுவே ஒரு பிரச்சனையை ஏற்படுத்தி விட்டதாம். அவர் இப்போது தங்கியுள்ள வீட்டில் அடிக்கடி ஏதோ ஒரு சத்தம் தொடர்ந்து கேட்டதாகவும், பூனைகள் அந்த வீட்டில் அதிகமாக சுற்றிக் கொண்டிருந்ததாகவும் தெரிகிறது. அந்த பயத்திலிருந்து தப்பிக்க அஞ்சலி தற்போது வேறு வீட்டிற்கு மாறிவிட்டாராம். அஞ்சலியும், ஜெய்யும் காதலித்து வருவதாகச் சொல்லப்படும் நிலையில் அஞ்சலி விரைவில் சென்னைக்கே வந்து விடுவார் என்றும் சொல்கிறார்கள். இருவரும் இணைந்து நடித்துள்ள பலூன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.