கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்? | ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! |
தமிழ்ப் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த அஞ்சலி இங்கு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சென்னையிலிருந்து ஐதராபாத்திற்கு குடி பெயர்ந்தார். தெலுங்கிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்ததால் அங்கேயே தங்கிவிட்டார். தொடர்ந்து ஒரு சில பேய்ப் படங்களில் நடித்து வந்த அஞ்சலிக்கு அதுவே ஒரு பிரச்சனையை ஏற்படுத்தி விட்டதாம். அவர் இப்போது தங்கியுள்ள வீட்டில் அடிக்கடி ஏதோ ஒரு சத்தம் தொடர்ந்து கேட்டதாகவும், பூனைகள் அந்த வீட்டில் அதிகமாக சுற்றிக் கொண்டிருந்ததாகவும் தெரிகிறது. அந்த பயத்திலிருந்து தப்பிக்க அஞ்சலி தற்போது வேறு வீட்டிற்கு மாறிவிட்டாராம். அஞ்சலியும், ஜெய்யும் காதலித்து வருவதாகச் சொல்லப்படும் நிலையில் அஞ்சலி விரைவில் சென்னைக்கே வந்து விடுவார் என்றும் சொல்கிறார்கள். இருவரும் இணைந்து நடித்துள்ள பலூன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.