புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
பாகுபலி ரிலீஸ் தேதியை அறிவித்தலிருந்து பல்வேறு இடங்களில் இருந்தும் எதிர்பாராத இடங்களிலிருந்தும் சிக்கலுக்கு மேல் சிக்கல் உருவாக்கிக் கொண்டே வருகிறது. அதையெல்லாம் சமாளித்து பாகுபலி வீர நடை போட்டு வருகிறார். இப்போது கடைசி நேர சிக்கல் ஒன்று வந்திருக்கிறது. அதுபற்றிய விபரம் வருமாறு:
பாகுபலி 2 படத்தின் இந்தி மொழி தவிர பிற மொழிகளின் உரிமைகள், வெளிநாட்டு உரிமை, சேட்டிலைட் உரிமையையும் கே புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் ராஜராஜன் பெற்றுள்ளார். அவர், சவாலே சமாளி என்ற பெயரில் படம் எடுக்க சென்னை, அண்ணாநகரை சேர்ந்த எஸ்.கார்த்திகேயனிடம் ஒரு கோடியே 11 லட்சம் ரூபாயை கடனாக பெற்றுள்ளார். வட்டியுடன் சேர்த்து, ஒரு கோடியே 48 லட்சம் ரூபாயாக திருப்பி தரும் வகையில் உத்தரவாதம் வழங்க உத்தரவிட கோரி, கார்த்திகேயன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், உத்தரவாதம் அளிக்க தவறினால், பாகுபலி-2 படத்தின் அனைத்து உரிமைகளையும், முடக்கம் செய்து உத்தரவிட வேண்டும். அதேபோல, அவர் தயாரித்து விரைவில் வெளியில் வர உள்ள மடை திறந்து உள்ளிட்ட படங்களையும் வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மனுவுக்கு 4 வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்று கே புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜராஜனுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி விசாரணைக்கு வந்தது. அப்போது, எதிர்மனுதாரர் தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரினார். இதனையடுத்து, கால அவகாசம் வழங்கி, வருகிற 26ந் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. மனுதாரர் தரப்பில், படத்திற்கு தடை விதிக்க கோரினார். அப்போது, வழக்கின் விசாரணைய வரும் 26ம் தேதி வியாழக்கிழமை ஒத்தி வைப்பதாகவும், அன்றைய தினம் படத்துக்கு தடைவிதிப்பது குறித்து முடிவு செய்யலாம் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதற்கிடையில் வழக்கு தொடர்ந்த கார்த்திகேயனை சமாதானப்படுத்தும் முயற்சிகள் நடந்து வருகிறது. பாகுபலி 2 வருகிற 28ந் தேதி வெளிவர உள்ள நிலையில் 26ந் தேதி ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதை சரியாகி விடும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் பட குழுவினர்.