'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ராம்கோபால் வர்மாவையும், சர்ச்சையையும் பிரிக்கவே முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே பல முக்கிய நிகழ்வுகளைப் பற்றி தன்னுடைய டிவிட்டரில் அவர் கருத்துக்களைப் பதிவிட்டுக் கொண்டிருப்பார்.
பிரபல தெலுங்குத் திரைப்பட இயக்குனரும், நடிகருமான கே. விஸ்வநாத்திற்கு நேற்று தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது. தென்னிந்தியத் திரையுலகத்தினர் அவருக்குத் தொடர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டிருக்க, ராம்கோபால் வர்மா மட்டும் மாறுபட்ட கருத்தை பதிவிட்டார்.
“தாதா சாகேப் பால்கேவை விட கே. விஸ்வநாத் மிகச் சிறந்த இயக்குனர். தாதா சாகேப் பால்கே விருதை கே. விஸ்வநாத்திற்கு அளித்ததற்குப் பதிலாக கே. விஸ்வநாத் விருதை பால்கேவுக்கு வழங்கியிருக்கலாம். எனக்கு பால்கே மீது மரியாதை இல்லை என்று அர்த்தமில்லை. பால்கேவின் படங்களை விட கரண் ஜோஹர் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். பால்கே 95 படங்களை இயக்கியிருக்கிறார். ஆனால், ஒரு படம் கூட கரண் ஜோஹரின் படங்கள் அளவிற்கு இருந்தது இல்லை. பழையனவற்றைப் பற்றிப் பேசுவதை விட புதியவற்றிற்கு அங்கீகாரம் அளிக்கலாம்,” எனப் பதிவிட்டுள்ளார்.
வழக்கம் போல ராம்கோபால் வர்மாவின் இந்தக் கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளது.