தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கமல் இயக்கி, நடித்து வரும் சபாஷ் நாயுடு படப்பிடிப்பு எப்போது என்பதற்கு படக்குழு விளக்கம் அளித்துள்ளது. கமல் இயக்கி நடித்து வரும் படம் சபாஷ் நாயுடு படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெற்றது. அமெரிக்க படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பியநிலையில் அலுவலக மாடிப்படியில் இருந்து கமல் கீழே தவறி விழுந்தார். அவரது கால் எலும்பு முறிந்ததால் படப்பிடிப்பு தடைப்பட்டது.
சில மாதங்களுக்கு முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் கமல் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை. தற்போது, விஸ்வரூபம் 2 படத்தின் பணிகளைத் துவங்கியுள்ள கமல், 2017 ஆம் ஆண்டு விஸ்வரூபம் 2 வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். இதற்கிடையில், சபாஷ் நாயுடு படப்பிடிப்பு மீண்டும் எப்போது தொடங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து சபாஷ் நாயுடு படத்தில் பணியாற்றி வருபவரிடம் விசாரித்தால், "இப்போதைக்கு படப்பிடிப்பு தொடங்கப்படாது. ஸ்ருதிஹாசன் சங்கமித்ரா படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். ரம்யாகிருஷ்ணன், பிரம்மானந்தம் இருவரும் பல்வேறு படங்களுக்கு தேதிகளை ஒதுக்கி நடித்து வருகிறார்கள். விஸ்வரூபம் 2 பணிகளை முடித்துவிட்டு, தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்கவுள்ளார் கமல். அந்நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நீண்ட நாட்கள் நடைபெறவுள்ளது. அனைவரது தேதிகள் ஒன்றாக எப்போது கிடைக்கிறதோ, அப்போது மட்டுமே படப்பிடிப்பு தொடங்க முடியும். எனவே கண்டிப்பாக 2017ம் ஆண்டில் சபாஷ் நாயுடு வெளியாக வாய்ப்பில்லை" என்று தெரிவித்திருக்கிறார்கள்.