இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
இன்றைய இளம் ஹீரோக்களில் பலர் முந்தைய தலைமுறை ஹீரோக்களின் புகழில் குளிர்காயவே நினைக்கிறார்கள். முக்கியமாக ரஜினி, கமலின் புகழை இவர்கள் அறுவடை செய்ய நினைக்கிறார்கள். தங்களுடைய படங்களுக்கு ரஜினி, கமல் நடித்த படங்களின் தலைப்பை சூட்டிக்கொள்வதன் காரணமும் இதுவே.
'கட்டப்பாவை காணோம்' படத்தை தொடர்ந்து 'சைத்தான்' படத்தின் இயக்குநரான பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் 'சத்யா' என்ற படத்தில் நடித்து வருகிறார் சிபி சத்யராஜ். சத்யா - கமல் நடித்த படத்தின் தலைப்பு.
சத்யா படத்தை அடுத்து வினோத் இயக்கும் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இதுவரை பெயரிடப்படாமலே அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற் வந்தது. இந்நிலையில் இப்படத்திற்கு 'ரங்கா' என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள்.
முதலில் கமல்ஹாசன் நடித்த படத்தின் டைட்டிலை வைத்த சிபி சத்யராஜ், இப்போது ரஜினி நடித்த படத்தின் தலைப்பை தனது படத்திற்கு சூட்டியுள்ளார். ஆக்ஷன், த்ரில்லர் படமாக உருவாகி வரும் 'ரங்கா' படத்தில் கதாநாயகியாக நிகிலா விமல் நடிக்கிறார்.
இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து முடிந்துள்ளது. 'ரங்கா' படத்தை தொடர்ந்து 'தெகிடி' பட இயக்குனர் ரமேஷ் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் சிபி சத்யராஜ்!