'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
ஒவ்வொரு ஆண்டும் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் சர்ச்சைகள் கிளம்பும். இந்தாண்டும் தேசிய விருதுக்கு சர்ச்சைகள் கிளம்பின. விருது தேர்வுக்குழுவின் தலைவரான பிரியதர்ஷன், ஒருதலை பட்சமாக விருதை அறிவித்துள்ளார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, அக்ஷ்ய் குமாரின் நண்பர் பிரியதர்ஷன் என்பதால் இந்தாண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அக்ஷ்ய் குமாருக்கு அறிவிக்கப்பட்டது என்று சர்ச்சைகள் எழுந்தன.
இந்நிலையில் ஸ்டண்ட் நடிகர்களுக்கான நிகழ்ச்சி ஒன்று மும்பையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக அக்ஷ்ய் குமார் கலந்து கொண்டார். அப்போது, அக்ஷ்ய் குமாரிடத்தில் தேசிய விருது சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அக்ஷ்ய், கடந்த 25 ஆண்டுகளாக இந்த சினிமா துறையில் நான் இருக்கிறேன். ஒவ்வொரு ஆண்டும் விருது அறிவிப்பின் போது இதுபோன்ற சர்ச்சைகள் எழுகின்றன. 25 வருடங்களுக்கு பிறகு எனக்கு இப்போது தான் தேசிய விருது கிடைத்துள்ளது. ஒருவேளை அதற்கு நான் தகுதியானவன் அல்ல என்று நீங்கள் கருதினால், விருதை வேண்டுமானால் திருப்பி தந்துவிடுகிறேன் என்று கோபமாக கூறியுள்ளார்.