இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தென்னிந்திய சினிமா மற்றும் தொலைக்காட்சி டப்பிங் கலைஞர்கள் சங்கத்தினருக்கு சங்கம் மூலமே சம்பளம் கொடுக்கப்பட்டு வந்தது. தயாரிப்பாளர்களிடம் சங்கம் வசூலித்துக் கொடுக்கும். இதை எதிர்த்து சங்க உறுப்பினர்கள் மதியழகன், மகாலட்சுமி, கண்ணன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீமன்றம் சங்கத்தின் மூலம் சம்பளம் வசூலித்துக் கொடுப்பதே சரியான வழி என்று தீர்ப்பு வழங்கியது.
இதை தொடர்ந்து சங்கத்தின் தலைவர் கே.ஆர்.செல்வராஜ் பொதுச்செயலாளர் எம்.ராஜேந்திரன், பொருளாளர் டி.என்.பி.கதிரவன் தலைமையில் சங்கத்தின் அவசரக் கூட்டம் நடந்தது. பின்னர் தலைவர் செல்வராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:
நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி இனி சம்பளம் சங்கத்தின் மூலமே டப்பிங் கலைஞர்களுக்கு வழங்கப்படும். சம்பளத்தில் 10 சதவிகிதம் சங்கதின் நலநிதிக்காக பிடித்துக் கொள்ளப்படும். இந்தப் பணமும் சங்க உறுப்பினர்களின் நலனுக்காகத்தான் பயன்படுத்தப்படும். சங்கத்தின் தேர்தலை எதிர்த்து ரத்தினகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளர். அந்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வர இருக்கிறது. தீர்ப்பு வந்ததும் தேர்தல் நடத்தப்படும் என்றார்.