டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சினிமாவில் தனக்கென ஒரு பாணியை ஏற்படுத்திக்கொண்டவர் பாலா. தான் நினைத்ததை சுதந்திரமாக எடுக்கக்கூடியவர். முக்கியமாக பாலா இயக்கும் படங்களில் நடித்தால் நடிப்பில் நம்மை பட்டை தீட்டி விடுவார் என்று நடிகர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை உள்ளது. அந்த வகையில், விக்ரம், சூர்யா, ஆர்யா, அதர்வா போன்ற நடிகர்கள் பாலா படங்களில் நடித்த பிறகுதான் நடிப்பில் பளிச்சிட்டார்கள்.
முக்கியமாக யதார்த்த கதைகளை படமாக்கும் பாலா, தனது படங்களில் நடிப்பவர்களையும் யதார்த்த கேரக்டர்களாக நடிக்க வைப்பார். அதேபோல், சினிமா மேடைகளிலும் தனது மனதில் பட்டதை ஒழிவுமறைவில்லாமல் யதார்த்தமாக பேசுவார். அந்த வகையில், வனமகன் படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்ட பாலா, என்னிடம் ஒரு ஐம்பது கெட்டப்பழக்கம் இருக்கிறது என்றால், ஜெயம்ரவி மற்றும் ஏ.எல்.விஜய்யிடம் எந்த கெட்டப்பழக்கமும் இல்லை. ஒரு கெட்டப்பழக்கமாவது இருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை. இப்படிப்பட்ட நல்லப்பிள்ளைகளைப் பார்த்தால் எனக்கு பொறாமையாக உள்ளது. அதேசமயம் பெருமையாகவும் உள்ளது. இந்த நல்ல பிள்ளைகளை பெற்றதற்காக அவர்களின் பெற்றோருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் என்றார்.