'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடத்தில் உதவியாளராக பணியாற்றி விட்டு ராஜா ராணி படத்தில இயக்குனரானவர் அட்லீ. அதையடுத்து விஜய்யின் தெறி படத்தை இயக்கியவர் தற்போது விஜய்யின் 61வது படத்தையும் இயக்கி வருகிறார். இந்நிலையில், தனது ஏ பார் ஆப்பிள் நிறுவனத்தில் சார்பில் சங்கிலி புங்கிலி கதவ தொற என்ற படத்தையும் தயாரித்துள்ளார் அட்லீ. அந்த படத்தை மறைந்த நடிகர் எம்.ஆர்.ராதாவின் பேரன் ஐக் இயக்கியுள்ளார். ஜீவா, ஸ்ரீதிவ்யா, ராதாரவி, சூரி, மொட்ட ராஜேந்திரன், கோவை சரளா உள்பட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் ஆடியோ விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு ஆடியோவை வெளியிட்டார். இவ்விழாவில் இயக்குனர் அட்லி பேசுகையில், என்னோட முதல் படமான ராஜா ராணியோட ஆடியோ விழா இதே சத்யம் தியேட்டரில் தான் நடைபெற்றது. அப்போது டைரக்டராக நின்றேன். இப்போது தயாரிப்பாளராக நிற்கிறேன். பதட்டமாக உள்ளது.
மேலும், நாம மட்டுமே படம் பண்ணிட்டு போகாமல், மற்றவர்களோட வளர்ச்சிக்கும் பயன்பட வேண்டும் என்று நினைத்தபோதுதான் இந்த சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தை தயாரிக்க முடிவு செய்தேன். என் உருவத்தை பார்த்து இவன் என்ன பண்ணப்போறான் என்று நினைக்காமல் என்னை நம்பி எப்படி ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்டராக்கினாரோ அதேபோல், இந்த ஐக்கை நம்பி இந்த படத்தை கொடுத்தேன். அதற்கு நான் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்.
எனக்கு பர்சனலாவே பேய்ன்னா ரொம்ப பயம். படப்பிடிப்புக்கு போகும்போது ஹோட்டல் அறைகளில் தங்கியிருக்கும்போது அந்த அறைகளைப்பற்றி விசாரிப்பேன். ஏதேனும் பயப்படுற மாதிரி சொன்னால், உடனே ரூம்பையே மாற்றி விடுவேன். நான் அப்படிப்பட்ட ஒரு கேரக்டர். ஆனா மற்ற எந்தவொரு விசயங்களுக்கு பயப்படவே மாட்டேன்.
ஆனால் இந்த மாதிரி பயந்தாங்கொள்ளிகள் தான் எப்பவுமே பேய்களைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பார்கள். ஒருநாள் வந்து ஐக் இந்த படத்தின் கதையைப்பற்றி சொன்னபோது, பெட்டில் படுத்திருக்கும் ஸ்ரீதிவ்யா, கீழே ஏதோ சத்தம் கேட்குது என்கிறபோது ஜீவா கீழே எட்டிப்பார்ப்பார். அப்போது பெட்டுக்கு கீழேயும் ஒரு ஸ்ரீதிவ்யா படுத்திருப்பார். இந்த ஒரு சீனை சொன்னதுமே நான் இம்ப்ரஸாகி விட்டேன். அதன்பிறகுதான் இந்த படத்தின் ஸ்கிரிப்ட்டை ரெடி பண்ணச் சொன்னேன். இந்த கதையை கேட்ட உடனே ஜீவா டார்லிங்கிட்ட சொல்லலாம் என்று சொன்னேன். அவரும் கேட்ட உடனே பண்ணிடலாம் என்று சொன்னார். ஸ்ரீதிவ்யாவின் நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். முதல் படத்திலேயே அவரை நடிக்க வைக்க நினைத்தேன். ஆனால் கால்ஷீட் கிடைக்கல.
இந்த படத்துல ஒரு வித்தியாசமான சூரியை பார்க்கலாம். இது ஒரு கம்ப்ளீட் பேமிலி எண்டர்டெய்ன்மென்ட் படமாக இருக்கும் என்பதில் எந்த டவுட்டும் இல்லை. குழந்தைங்களோட சிரிச்சு பார்க்கிற பேய் படம்னா இந்த படமாகத்தான் இருக்கும் என்றார்.