டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பிரபல இயக்குநர் கே.விஸ்வநாத்திற்கு சினிமா துறையின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
1930-ம் ஆண்டு, பிப்., 19-ம் தேதி ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர் காசிநாதுனி விஸ்வநாத் எனும் கே.விஸ்வநாத். சினிமாவில் சவுண்ட் டிசைனராக அறிமுகமாகி, இயக்குநர், நடிகர் என் பன்முகம் காட்டியவர். இவர் இயக்கிய சங்கராபரணம், சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து... என 25-க்கும் மேற்பட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். தெலுங்கு மட்டுமல்லாது ஹிந்தி, தமிழ் மொழிகளிலும் பிரபலமான இயக்குநராக திகழ்ந்தார்.
இயக்குநராக மட்டுமல்லாது குருதிப்புனல், முகவரி, காக்கை சிறகினிலே, யாரடி நீ மோகினி, ராஜபாட்டை, உத்தம வில்லன், லிங்கா... என நிறைய தமிழ் படங்களில் நடிகராகவும் அசத்தியுள்ளார். ஏற்கனவே பத்மஸ்ரீ விருது, 5 முறை தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ள கே.விஸ்வநாத்திற்கு இப்போது மற்றொரு மகுடமாக இந்தாண்டு அவருக்கு தாதா சாகேப் பால்கே விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசால் சினிமா துறையில் வழங்கப்படும் மிகப்பெரிய விருதாக இந்த விருது கருதப்படுகிறது.