அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
மற்ற நடிகர்களுக்கும், வி.கே.ராமசாமிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. மற்ற நடிகர்கள் வயதான தோற்றத்தில் நடித்திருந்தாலும் தங்களது ஆரம்ப காலகட்டத்தில் ஹீரோவாகவோ அல்லது இளைஞனாகவோ நடித்திருப்பார்கள். ஆனால் வி.கே.ராமசாமி அப்படியில்லை. அறிமுகமானதிலிருந்து கடைசி வரை நடுத்தர வயது அல்லது முதிர்ந்த வயது தோற்றத்திலேயே நடித்திருப்பார். அண்ணன், அப்பா, தாத்தா மாதிரியான கேரக்டர்கள். (அரிதான ஒன்றிரண்டு படத்தில் நடித்திருக்கலாம். ஆனால் அதுபற்றி தகவல் இல்லை).
சினிமாவில் எப்படி அறிமுகமாகிறோமோ அப்படியேதான் கடைசி வரை இருப்பார்கள் என்பது பொதுவான ஒரு அபிப்ராயம். அதற்கேற்ப வி.கே.ராமசாமியின் அறிமுகம், அதனால் கடைசி வரை அப்படியே இருந்தார். 1947ம் ஆண்டு முதல் பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்து நாடகங்ளில் நடித்துக் கொண்டிருந்தார். நாடகங்களில் வயதான கேரக்டர்களில் நடிப்பதில் ஸ்பெஷலிஸ்டாக இருந்தார். அப்படி அவர் நடித்த நாடகங்களில் ஒன்று தியாக உள்ளம். அதில் வி.கே.ராமசாமி பேங்கர் சண்முகம் பிள்ளை என்கிற 60 வயது முதியவர் வேடத்தில் நடித்தார்.
இந்த நாடகத்தை பார்த்த ஏவி.மெய்யப்ப செட்டியார் அந்த நாடகத்தை நாம் இருவர் என்ற திரைப்படமாக தயாரித்தார். நாடகத்தில் நடித்த வயதான கேரக்டரையே அவருக்கும் கொடுத்தார் மெய்யப்ப செட்டியார். அந்த கேரக்டர் பெரும் புகழ்பெற்றதால் தொடர்ந்து வி.கே.ராசாமிக்கு வயதான கேரக்டர்களே வந்தது. அவரும் சலிக்காமல் நடித்தார். கடைசிவரை வயதான கேரக்டர்களிலேயே நடித்தார்.