தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட் பாடகர் சோனு நிகாம், காலை நேர வழிபாட்டின் போது ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என கருத்து தெரிவித்தார். சோனுவின் இந்த கருத்து, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் சோனுக்கு தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சோனுவின் கருத்திற்கு பாடலாசிரியர் ஜவேத் அக்தர் ஆதரவு தெரிவித்துள்ளார். சமீபத்தில், 2017 ம் ஆண்டிற்கான தாதா சாகிப் பால்கே விருது வழங்கும் விழாவில் ஜவேத் கலந்து கொண்டார். இந்த விழாவில் ஜவேத்திற்கு சிறந்த பாடலாரிசிரியர், புலவர் மற்றும் கதையாசிரியர் விருது வழங்கப்பட்டது.
அப்போது சோனு விவகாரம் குறித்து ஜவேத்திடம் கேட்கப்பட்டது. அப்போது பதிலளித்த ஜவேத், அவர் கூறியதில் தவறு இருப்பதாக நான் நினைக்கவில்லை. நீங்கள் வழிபாடு நடத்துவது மசூதியாகவோ, சர்ச்சாகவோ, கோயிலாகவோ, குருத்வாராகவோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அந்த வழிபாடு மற்றவர்களை தொந்தரவு செய்யும் வகையில் இருக்கக் கூடாது என தெரிவித்தார்.