தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி |
பெண் இயக்குனர்கள் என்றாலே சமூகத்தில் பெண்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் வகையிலான கதைகளைத்தான் பெரும்பாலும் இயக்குவார்கள். ஆனால் டைரக்டர் சுதா அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட இயக்குனர். தனது முதல் படமான துரோகியை ஆக்சன் கதையில் இயக்கினார். ஸ்ரீகாந்த்-விஷ்ணு அந்த படத்தில் நடித்தார்கள்.
அதேபோல், மாதவன்-ரித்திகா சிங் நடித்த இறுதிச்சுற்று படத்தை குத்துச் சண்டையை மையமாகக் கொண்ட கதையில் இயக்கினார். தமிழில் வெற்றி பெற்ற அந்த படத்தை தெலுங்கிலும் இயக்கி ஹிட் கொடுத்து விட்ட சுதா, தனது அடுத்த படவேலைகளை தொடங்கி விட்டார். அந்த படத்தையும் வழக்கம்போல் ஆக்சன் கதையில்தான் இயக்குகிறார். அந்த படத்தில் பிரபல நடிகர் ஒருவர் நடிப்பதாக கூறியுள்ள சுதா, அந்த நடிகர் யார் என்பதை இன்னும் சில தினங்களில் அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சுதாவின் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கயிருப்பதாக ஒரு செய்தி கோலிவுட்டில் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. அது உண்மையா? இல்லை வதந்தியா? என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்து விடும்.