டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கிய அனைத்து படங்களுக்குமே மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார்தான் பாடல்கள் எழுதி வந்தார். ஆனால் அவர் மறைந்து விட்டதை அடுத்து தற்போது ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள வனமகன் படத்திற்கு மதன்கார்க்கி அனைத்து பாடல்களையுமே எழுதியுள்ளார்.
இதுகுறித்து மதன்கார்க்கி கூறுகையில், பாடலாசிரியர் நா.முத்துக்குமார் உயிரோடு இருந்திருந்தால் நான் இந்த படத்திற்குள் வந்திருக்க முடியாது. ஏ.எல்.விஜய்- நா.முத்துக்குமார் இடையிலான கூட்டணி அந்த அளவுக்கு சிறப்பாக இருந்தது. முத்துக்குமாரின் ஒவ்வொரு பாடலுக்கும் நான் பெரிய விசிறி. ஏ.எல்.விஜய் தனது ஒவ்வொரு படங்களிலுமே வித்தியாசமான கதைக்களங்களில் படம் இயக்குகிறார். இந்த படத்தில் மாறுபட்ட சூழலில் 5 பாடல்கள் எழுதும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.
மேலும், இந்த படத்திற்காக முரடா முரடா என்றொரு பாடல் கம்போஸிங் நடந்தபோது எனது 7 வயது மகன் ஹைக்கூவையும் அழைத்து சென்றிருந்தேன். அப்போது டியூனுக்கு நான் பாடல் வரிகளை எழுதி வர, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் டியூனுக்கு பாடிப்பார்த்துக்கொண்டே வந்தார். அப்போது ஒரு வரியை நான் எழுதியபோது, உன் இதயத்தை மாற்று என்று வைத்தாலென்ன என்று என் மகன் ஹைக்கூ கேட்டான். அவன் சொன்னதைக் கேட்டு அனைவருக்குமே ஒரே ஆச்சர்யம். அவன் சொன்ன அந்த வரிகள் டியூனுக்கும் மேட்சாக இருந்ததோடு, சூழலுக்கும் மிகப்பொருத்தமாக இருந்தது. அதனால், பல்லவியின் கடைசியில் அவன் சொன்ன அந்த வரியை முதல் வரியாக மாற்றி, முரடா முரடா உன் இதயத்தை மாற்று என்று பாடினார் ஹாரிஸ் ஜெயராஜ். ஆக, இந்த படத்தில் என் மகனும் பாடலாசிரியராகியிருக்கிறார்.
மேலும், ஹாரிஸ் ஜெயராஜின் 50-வது படம் இது. இதுவரை அவர் இசை யமைத்த சாமுராய் படத்தில் இடம்பெற்ற மூங்கில் காடு பாடல் தவிர அனைத்து பாடல்களுக்குமே அவர் டியூன் போட்டுதான் பாடல் எழுதப்பட்டுள்ளது. அந்த பாடலை எனது தந்தை வைரமுத்து எழுதியிருந்தார். அதையடுத்து இப்போது இந்த வனமகன் படத்திற்காகவும் நான் எழுதியுள்ள பச்சை உடுத்திய காடே என்ற பாடலை எழுதிய பிறகு டியூன் போட்டுள்ளார் ஹாரிஸ் ஜெயராஜ். அந்த வகையில், இதுவரை இரண்டு பாடல்களுக்கு மட்டுமே எழுதிய பிறகு டியூன் போட்டுள்ளார் அவர் என்றார் மதன் கார்க்கி.