சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
சென்னை கிண்டியில் மத்திய அமைச்சர் வெங்கைய்ய நாயுடுவை தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து பேசினார். இவர்களுடன் கமலும் சென்றிருந்தார்.
மத்திய அமைச்சருடன் நடந்த இந்த கூட்டத்தில், தென்னிந்திய திரைப்பட துறையில் உள்ள பிரச்னைகள், சவால்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், கமல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய விஷால், நவீன தொழில்நுட்ப முறையில் திரைப்படங்கள் வெளியிடப்படுவது தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு திரைப்படம் திரைக்கு வருவதற்கு முன்பே வெளிவருவதால் திரையுலகம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகிறது. திரைப்படங்கள் இணையதளங்களில் வெளியாவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், தென்னிந்திய திரைப்பட துறையில் உள்ள பிரச்னைகள் குறித்து மத்திய அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம். அமல்படுத்தப்பட உள்ள ஜிஎஸ்டி திரைப்பட துறைக்கு பயனுள்ளதாக அமையும் என நம்புகிறோம். அது குறித்து கோரிக்கை வைத்துள்ளோம். இணையதளங்களில் படங்கள் வெளியாவதை தடுப்பது குறித்தும் பேசி உள்ளோம். எப்படி தடுப்பது என்பதற்கான கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளோம்.
இது தொடர்பாஜ உயர்மட்டக் குழு கூட்டம் டில்லியில் விரைவில் நடக்க உள்ளது. இதில் நல்ல முடிவு எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். திருட்டு விசிடி.,யை ஒழிப்பது குறித்து கோரிக்கை வைத்துள்ளோம். இது ஒரு மாநிலம் சம்பந்தப்பட்ட பிரச்னை அல்ல. தமிழ் திரைப்பட துறையின் வளர்ச்சிக்கு தேவையான கோரிக்கைகளை அளித்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.