அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' |
தனுஷ் இயக்குநராக அறிமுகமாகி ஆகியுள்ள ப.பாண்டி படம் கடந்த வாரம் வெளியானது. ராஜ்கிரண் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் அவருடைய 19 வயது வேடத்தில் தனுஷ் நடித்திருந்தார். மடோனா செபஸ்டியன், பிரசன்னா, சாயா சிங் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஏப்ரல் 14-ம் தேதி வெளியான ப.பாண்டி படத்தை வுண்டர்பார் நிறுவனம் தயாரித்து, கே.புரொடக்ஷன்ஸ் வெளியிட்டது. பாகுபலி- 2 படத்தை வாங்கிய கே.புரடக்ஷன்ஸ் நிறுவனம், ப.பாண்டி படத்தின் மீது முழு நம்பிக்கை வைத்திருந்தது. அந்த நம்பிக்கை வீண்போகவில்லை.
ப.பாண்டி படத்துக்கு நல்ல ரிப்போர்ட். ஏப்ரல் 14-ம் தேதி வெளியான படங்களில் கடம்பன், சிவலிங்கா படங்கள் தியேட்டர்களிலேயே இல்லை. ப.பாண்டி படமோ மக்களிடையே வரவேற்பைப் பெற்று திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில், ப.பாண்டி படத்தைப் பார்த்துவிட்டு, "தயவு செய்து இக்கதையைத் தொடருங்கள் தனுஷ். ப.பாண்டி மற்றும் பூந்தென்றலுக்கு இடையே அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை காண ஆவலாகவுள்ளேன். மேலும், இயக்குநர்கள் குடும்பத்துக்கு தனுஷை வரவேற்கிறேன். ப.பாண்டி அருமையான படம். கண்டிப்பாக அனைத்து பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் பார்க்க வேண்டிய படம்" என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் இயக்குநர் கவுதம் மேனன்.
கவுதமுக்கு தனுஷ் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் எனை நோக்கி பாயும் தோட்டா படம் சம்மந்தமாக தனுஷ். கவுதம் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதால் படப்பிடிப்பு தடைபட்டு நிற்கிறது. இந்த நேரத்தில் கவுதம் மேனன் இப்படி ஒரு பாராட்டை தெரிவித்துள்ளார்.