ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் |
விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி தமிழகத்தில் வருகிற ஏப்., 25-ம் தேதி முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரின் ஆதரவை கேட்டுள்ளார் திமுக., செயற்தலைவர் ஸ்டாலின். அதன்படி காஞ்சிபுரம் - திருவள்ளூர் ஏரியா தியேட்டர் உரிமையாளர்கள் 25-ம் தேதி நடக்கும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் - திருவள்ளுர் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் கண்ணப்பன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது... வரும் 25-ம் தேதி விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக நடைபெறும் முழு அடைப்பிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அன்று பகல் மற்றும் மதிய காட்சிகள் ரத்து செய்யபடுகின்றன. மாலை மற்றும் இரவு காட்சிகள் வழக்கம் போல் நடைபெறும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.