ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நாகசைதன்யா நடிப்பில், 'ராராண்டோ வெடுக்க சூடம்' என்கிற படம் விரைவில் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. ராகுல் பிரீத் சிங், லாவண்யா திரிபாதி இருவரும் கதாநாயகிகளாக நடிக்க ஜெகபதிபாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். நாகார்ஜுனாவை வைத்து, இரண்டு வருடங்களுக்கு முன் 'சோக்காடே சின்னி நாயனா' என்கிற ஹிட் படத்தை கொடுத்து இயக்குனராக அறிமுகமான கல்யாண் கிருஷ்ணா தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். நாகார்ஜுனாவே இந்தப்படத்தை தயாரித்தும் உள்ளார்.
இந்தப்படத்தின் எடிட்டிங் பணிகள் நடைபெற்றபோது, நாகார்ஜுனா எடிட்டிங் டேபிளில் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக அமர்ந்து படத்தை இன்ச் பை இன்ச்சாக செதுக்கியுள்ளாராம். சில காட்சிகளை ரீஷூட் பண்ண சொன்னதாகவும் தகவல்.. இதுபற்றி சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் நாகார்ஜுனாவிடம் கேட்கப்பட்டது.. ஆனால் இதற்கு நேரடியாக பதில் சொல்லாத நாகார்ஜுன், “கடந்த இரண்டு வாரங்களாக இந்தப்படத்தின் எடிட்டிங்கில் பிசியாக இருந்தேன்.. பைனல் அவுட்புட் எனக்கு திருப்தி என தோன்றிய பின்தான் இந்த பத்திரிகையாளர் சந்திப்பையே ஏற்பாடு செய்ய சொன்னேன்.. உண்மையிலேயே படம் நன்றாக வந்துள்ளது” என கூறியுள்ளார் நாகார்ஜுனா.