டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாரதிராஜாவின் அன்னக்கொடி படத்தில் அறிமுகமானவர் சுபிக்ஷா. அதையடுத்து, நினைத்தது யாரோ, திரைக்கு வராத கதை, கடுகு ஆகிய படங்களில் நடித்தவர் தற்போது நேத்ரா, ரீங்கார ஓசை, ரா ரா ராஜசேகர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் ஏ.வெங்கடேஷ் இயக்கும் நேத்ரா படத்தில் டைட்டீல் ரோலில் நடிக்கிறார் சுபிக்ஷா.
அந்த படம் குறித்து அவர் கூறுகையில், நேத்ரா படத்தில் டைட்டீல் ரோலில் நடிப்பது சந்தோசமாக உள்ளது. கடுகு படத்தில் ஒரு கேரக்டரில் நடித்துள்ள டைரக்டர் ஏ.வெங்கடேஷ், அதற்கான டப்பிங் பேசியபோது, நான் நடித்துள்ள பகுதியை பார்த்திருக்கிறார். அதில் எனது பர்பாமென்ஸ் அவருக்கு பிடித்ததால் நேத்ரா படத்தில் என்னை நடிக்க வைத்தார். அந்த வகையில, கடுகு படத்தில் நான் சிறப்பாக நடித்ததற்காக கிடைத்த பரிசு என்றுதான் நேத்ரா படத்தை சொல்ல வேண்டும். அப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கனடாவில் நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் 15 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டால் எனக்கான காட்சிகள் அனைத்தும் முடிவடைந்து விடும்.
மேலும், கடுகு படம் வெளியான பிறகு பல டைரக்டர்கள் என்னை தொடர்பு கொண்டு எனது நடிப்பை பாராட்டினர். ஐந்து டைரக்டர்கள் என்னை சந்தித்து கதை சொல்லியிருக்கிறார்கள். அதில், எந்தெந்த கதைகளில் நடிக்கலாம் என்பது குறித்து ஆலோசனை செய்து கொண்டிருக்கிறேன். நேத்ரா படப்பிடிப்பு முடிந்ததும் எனக்கு பிடித்த கதைகளை ஓகே செய்து நடிக்கத் தொடங்குவேன் என்கிறார் சுபிக்ஷா.