'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
சத்யராஜின் மன்னிப்பை ஏற்று பாகுபலி-2 படத்திற்கு எதிரான பேராட்டத்தை வாபஸ் பெற்றார் வாட்டாள் நாகராஜ். இந்திய சினிமாவை வியப்பில் ஆழ்த்த வரும் பாகுபலி-2 படம் உலகம் முழுக்க சுமார் 6000 தியேட்டர்களில் வருகிற ஏப்., 28-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.
ஆனால் காவிரி விவகாரத்தில் சத்யராஜ் பேசிய பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் உள்ள கன்னட சலுவாளி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் போராட்டம் நடத்தினார். மேலும் பாகுபலி ரிலீஸாகும் அன்று மாநிலம் தழுவிய பந்த் நடத்தப்போவதாகவும் அறிவித்தார்.
இதனால் பாகுபலி-2 ரிலீஸாவதில் சிக்கல் இருந்தது. சத்யராஜை காரணம் காட்டி இவ்வளவு பெரிய படத்தை தடை செய்வது சரியில்லை, படத்தை ரிலீஸ் செய்ய ஒத்துழையுங்கள் என்று ராஜமெளலி வேண்டுகோள் விடுத்தார். ஆனால் போராட்டாக்காரர்கள் சத்யராஜ் மன்னிப்பு கேட்டால் தான் போராட்டத்தை வாபஸ் பெறுவோம் என்று பிடிதவாதமாக இருந்தனர்.
இந்நிலையில் நேற்று சத்யராஜ், காவிரி விகாரத்தில் தான் பேசியதற்கு 9 வருடங்களுக்கு பிறகு கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக கூறினார். சத்யராஜின் மன்னிப்பை ஏற்று போராட்டத்தை வாபஸ் பெறுவதாக வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது... பாகுபலி படத்தின் மீதோ, ராஜமெளலி மீதோ எந்த தனிப்பட்ட வெறுப்பும் கிடையாது. சத்யராஜ் பேசி பேச்சிற்கு தான் எதிர்ப்பு தெரிவித்தோம். சத்யராஜின் மன்னிப்பை நாங்கள் ஏற்று கொள்கிறோம். இதனால் பாகுபலி-2 படத்திற்கு எதிராக ஏப்., 28-ம் தேதி நடக்க இருந்த போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம். இனி சத்யராஜ் கவனமாக பேச வேண்டும் என்று கூறியுள்ளார்.
கன்னட அமைப்பின் போராட்டம் வாபஸ் ஆனதை தொடர்ந்து பாகுபலி-2-க்கு கர்நாடகாவில் எழுந்த சிக்கல் தீர்ந்துள்ளது.