பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாகுபலி-2 விவகாரத்தில் சத்யராஜ் எடுத்த முடிவுக்கு நடிகர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்திருக்கிறார். இந்திய சினிமாவே ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் ‛பாகுபலி-2' படம் அடுத்தவாரம் ஏப்., 28-ம் தேதி உலகம் முழுக்க ரிலீஸாக இருக்கிறது. ஆனால் காவிரி விவகாரத்தில் 9 ஆண்டுகளுக்கு முன்னர் சத்யராஜ் பேசிய பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு இப்படத்தை திரையிட எதிர்ப்பு கிளம்பியது.
இந்த விவகாரத்தில் சத்யராஜ் நேற்று தனது வருத்தத்தை பதிவு செய்தார். அதேசமயம் தொடர்ந்து தமிழ் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பேன் என்றும் தெரிவித்தார். இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பின.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் சத்யராஜ்க்கு நடிகர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது... ‛‛சூழ்நிலையை கருத்தில் கொண்டு நடிகர் சத்யராஜ் நல்ல முடிவை எடுத்திருக்கிறார். இந்த விஷயத்தில் அவரின் செயல் பாராட்டத்தக்கது என்று கூறியிருப்பதுடன் விரும்பாண்டி படத்தில் தான் பேசிய வசனமான "மன்னிப்பு கேக்குறவன் பெரிய மனுஷன்" என்ற வசனத்தையும் டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
கமலின் இந்த பதிவிற்கு சத்யராஜின் மகனும், நடிகருமான சிபிராஜ், தன் டுவிட்டரில், உங்களது ஆதரவு நன்றி என்று ரீ-டுவிட் செய்திருக்கிறார்.