'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சமீபகாலமாக சின்னத்திரையில் தொகுப்பாளர்கள் பலரும் சினிமாவில் ஹீரோவாகிக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல் ரம்யா, திவ்யதர்ஷினி உள்ளிட்ட சில தொகுப்பாளினிகளும் சினிமாவில் சிறிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணியில் ரம்யா நடித்தார். தனுஷின் ப.பாண்டியில் திவ்யதர்ஷினி நடித்தார். இவர்களைத் தொடர்ந்து இன்னொரு தொகுப்பாளினியான அகல்யா வெங்கடேசனுக்கும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. அதுவும் அஜீத்தின் தங்கையாக ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டுமாம்.
இதுகுறித்து அவர் கூறும்போது, தற்போது நான் சில லைவ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருவதோடு, ஆதித்யாவில் ஒளிபரப்பாகும் மாமோய் நீங்க எங்க இருக்கீங்க என்ற நிகழ்ச்சியிலும் டவுட் செந்திலின் மனைவி ரோலில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இந்த நிகழ்ச்சி குட்டி குட்டியான எபிசோடு என்றாலும், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான கருத்துக்களை மையமாக வைத்து நடிப்பதால் நடிப்பில் நல்ல தேர்ச்சி பெற்று வருகிறேன்.
அதனால், இனிமேல் நல்ல வாய்ப்புகள் வந்தால் சினிமா, சின்னத்திரை எதுவானாலும் நடிக்க திட்டமிட்டுள்ளேன். முக்கியமாக ஒரு படத்திலாவது அஜித்தின் தங்கையாக நடிக்க வேண்டும் என்பதுதான் எனது பெரிய ஆசையாக உள்ளது. காரணம், நான் அஜித்தின் தீவிரமான ரசிகை. அவர் நடித்த ஒரு படத்தைகூட தவறவிடமாட்டேன். அதனால் எதிர்காலத்தில் அஜித்துடன் நடிக்கும் வாய்ப்புக்காக கண்டிப்பாக முயற்சி செய்வேன் என்கிறார் அகல்யா.