தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தென்னிந்தியாவில் மூன்று மாநில அரசுகளுக்கு சிம்ம சொப்பனாக இருந்த சந்தன கடத்தல் வீரப்பன், கடந்த 2004-ம் ஆண்டு, ஐபிஎஸ்., அதிகாரி விஜய குமார் தலைமையிலான அதிரடி போலீஸார் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டார். வீரப்பன் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இரண்டு படங்கள் வெளிவந்துவிட்டன. இந்நிலையில், வீரப்பன் சம்பவத்தை, ஐபிஎஸ்., அதிகாரி விஜய குமார் ‛வீரப்பன் - சேசிங் தி பிரிகண்ட்' என்ற பெயரில் புத்தமாக எழுதியுள்ளார். இந்தப்புத்தகத்தின் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் குமார் புத்தகத்தை வெளியிட்டார்.
பின்னர் பேசிய அக்ஷ்ய் குமாரிடம், வீரப்பன் - விஜய குமார் இந்த இரண்டு ரோல்களில் உங்களுக்கு யாருடைய ரோலில் நடிக்க ஆசை என்று செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த அக்ஷ்ய், ‛‛இரண்டு பேரின் கேரக்டரும் மிகவும் ஆர்வம் அளிக்கும் வகையில் உள்ளது. என்னைப் பொறுத்தமட்டில் நான், விஜயகுமார் ரோலில் தான் நடிக்க ஆசைப்படுகிறேன். ஏனென்றால் இந்த ஆபரேஷனை பக்காவாக திட்டமிட்டு, அதை தனது புத்திசாலிதனத்தால் வெற்றிகரமாக நடத்தி காட்டியவர் அவர் தான்'' என்று கூறியுள்ளார்.