டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சென்னை : பாகுபலி-2 படத்திற்கு கர்நாடாகாவில் எழுந்த பிரச்னையை தொடர்ந்து, அப்படத்தில் கட்டப்பாவாக நடித்த நடிகர் சத்யராஜ், மன்னிப்பு கேட்டுள்ளார்.பாகுபலி 2 படத்தை கர்நாடகாவில் திரையிட கன்னட அமைப்புகள் அனுமதி மறுத்து வருகின்றன. 9 வருடங்களுக்கு முன் சத்யராஜ் பேசிய பேச்சுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் கோரி வருகின்றன. சத்யராஜை எதிர்த்தும், பாகுபலி 2 பட வெளியீட்டை எதிர்த்தும், பாகுபலி 2 படம் உலகம் முழுவதும் வெளியாகும் நாளான ஏப்ரல் 28ம் தேதி பந்த் ஒன்றை நடத்த உள்ளார்கள். ஒரு திரைப்படத்தை எதிர்த்து பந்த் நடத்தும் அளவிற்கு கன்னட அமைப்புகள் இறங்கிப் போயுள்ளன. இதுதொடர்பாக ராஜமெளலி கூட தன் வருத்தத்தை பதிவு செய்திருந்தார். சத்யராஜின் தனிப்பட்ட கருத்துக்காக பாகுபலி-2 படத்தை எதிர்ப்பது சரியல்ல. ஒருவர் பேசிய கருத்துடன் பாகுபலி-2 படத்தை தொடர்புபடுத்த வேண்டாம் என்று கூறியிருந்தார். இந்நிலையில் நடிகர் சத்யராஜ் இந்த விவகாரத்தில் தனது வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது...
சத்யராஜ் மன்னிப்பு
வணக்கம், 9 வருடங்களுக்கு முன் காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் தமிழ் மக்கள் தாக்கப்பட்டார்கள். இதுதொடர்பாக தமிழ் திரையுலகம் சார்பில் நடந்த கண்டன போராட்டத்தின் போது நான் உட்பட பல திரையுலகினர் தங்களது கண்டனங்களை பதிவு செய்திருந்தனர். இதற்காக எனது உருவப்பொம்பை எரிக்கப்பட்டது, கன்னட திரையுலகினர் சிலரும் ஆவேசமாக பேசியிருந்தனர். அதில் நான் பேசிய கருத்து கன்னட மக்களை புண்படுத்துவதாக நான் அறிகிறேன். அதற்காக 9 வருடங்களுக்கு பிறகு கன்னட மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.
தமிழர்கள் வருத்தப்பட வேண்டாம்
இதற்காக என் மீது அக்கறை கொண்ட தமிழ் ஆர்வலர்களும், தமிழ் மக்களும், நலம்விரும்பிகளும் என் மீது வருத்தம் கொள்ள வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன். பாகுபலி என்ற மிகப்பெரிய படத்தில் ஒரு சிறிய தொழிலாளி தான் நான். என் ஒருவனுக்காக பல ஆயிரம் பேரின் உழைப்பு மற்றும் பணம் விரையமாக விரும்பவில்லை. அதுமட்டுமல்ல பாகுபலி-2வை கர்நாடகாவில் வாங்கிய விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் நஷ்டமடைய வேண்டாம்.
தமிழர்களுக்கு தொடர்ந்து குரல் கொடுப்பேன்
ஆனாலும் இனி வரும் காலங்களில் தமிழக மக்களின் பிரச்னையாக இருந்தாலும், விவசாயிகளின் பிரச்னையாக இருந்தாலும் சரி தமிழர்களின் அனைத்து நியாயமான கோரிக்கைகளுக்கு எனது குரல் ஓங்கி ஒலித்து கொண்டு தான் இருக்கும் என்பதை தெளிவாக தெரிவித்து கொள்கிறேன்.
தமிழனாய் இருப்பதே மகிழ்ச்சி
இப்படி நான் செய்வதால், என்னை வைத்து படம் தயாரித்தால் பிரச்னை வரும் என்று கருதும் தயாரிப்பாளர்கள், இந்த சின்ன நடிகனான சத்யாரஜை யாரும் தங்களது படங்களில் நடிக்க வைக்க வேண்டாம். என்னை யாரும் அணுக வேண்டாம், என்னால் யாரும் நஷ்டப்பட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். ஏனென்றால் ஒரு நடிகனாக இருப்பதை விட, இறப்பதை விட எந்தவித மூட நம்பிக்கையும் இல்லாமல் ஒரு தமிழனாக இருப்பதும், இறப்பதும் எனக்கு மகிழ்ச்சி.
படத்தை வெளியிட ஒத்துழையுங்கள்...
ஆகவே எனது வருத்தத்தை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு பாகுபலி-2 படத்தை வெளியிட கர்நாடக மக்கள் ஒத்துழைக்க வேண்டும்படி கேட்டு கொள்கிறேன். என் உணர்வுகளை புரிந்து கொண்டு எனக்கு உறுதுணையாக இருந்த தமிழக மக்கள், நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என்னால் ஏற்பட்ட தொல்லைகளை பொறுத்து கொண்ட இயக்குநர் ராஜமெளலி மற்றும் பாகுபலி தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு சத்யராஜ் கூறியுள்ளார்.