டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தற்போது தமிழ்நாட்டில் பெரும் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிற பிரச்னை தஞ்சாவூர் மாட்டத்தில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம். இதனை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது தெரு நாய்கள் என்ற படம். உதவி கலை இயக்குனராக இருந்த ஹரி உத்ரா இயக்குனராகி படத்தை இயக்கி இருக்கிறார்.
அப்புக்குட்டி, பிரதிக், தீனா, மைம்கோபி, இமான் அண்ணாச்சி, இவர்களுடன் அக்ஷ்தா என்ற புதுமுகம் ஹீரோயினாக அறிமுகமாகிறார். தளபதி ரத்னம் ஒளிப்பதிவு செய்கிறார், ஹரிஷ், சதீஷ் இசை அமைக்கிறார்கள். ஸ்ரீ புவால் மூவி புரொடக்ஷன் சார்பில் சுசில்குமார், உஷா தயாரிக்கிறார்கள். படம் பற்றி இயக்குனர் ஹரி உத்ரா கூறியதாவது:
நம் நாட்டில் விவசாயம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது. கார்பரேட் நிறுவனங்களும், அரசும் சேர்ந்து விவசாய நிலங்களை தரிசு நிலங்களாக்குகிறது. இதை மையமாக வைத்து படத்தை இயக்கி உள்ளேன். படத்தில் ஹீரோ, ஹீரோயின் என்று தனியாக யாரும் இல்லை. எல்லோருமே கதை மாந்தர்கள் தான். படப்பிடிப்பு முழுவதும், மன்னார்குடியை சுற்றி நடந்துள்ளது. விவசாய மக்களின் வாழ்வாதாரத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தும் கார்பரெட் கம்பெனிகளுக்கு எதிரான படம். ஆனால் எந்த தனிப்பட்ட கம்பெனியையும், தனிப்பட்ட நபரையும் குறிவைத்து படம் எடுக்கவில்லை. பொதுவான தளத்தில் நின்று விவசாயிகளின் குரலாக ஒலிக்க இருக்கிறது இந்த தெரு நாய்கள் என்கிறார் இயக்குனர்.