இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
பிரபல கன்னட நடிகை ரம்யா அரசியலில் நுழைந்து பார்லிமென்ட் உறுப்பினராகவும் ஆனார். கடந்த ஆண்டு மீடியாக்களுக்கு பேட்டியளித்த ரம்யா, தான் பாகிஸ்தான் சென்று வந்ததாகவும், அங்குள்ள மக்கள் மிகவும் நல்லவர்கள் என்றும் கூறினார்.
ரம்யாவின் இந்த கருத்து தேசத்துக்கு விரோதமானது என்று வக்கில் விட்டல் கவுடா என்பவர் குடகு மாவட்டம் சோம்வார்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ரம்யா தேசத்துக்கு துரோகமான கருத்துக்களை கூறியதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அவர் மீது தேசதுரோக வழக்கு தொடர முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை அறிந்ததும் ரம்யா ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.