ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
நடிகர் நாசர் தலைமையில் நடிகர் சங்கத்தில் விஷால் உள்ளிட்டவர்கள் போட்டியிட்ட போது அவர்களுக்கு ஆதரவாக இருந்தவர்களில் சத்யராஜ் குறிப்பிடத்தக்கவர். இப்போது சத்யராஜுக்கு எதிராக கர்நாடகத்தில் அடுத்த வாரம் 28ம் தேதி பந்த் நடத்த உள்ளார்கள். தமிழ் நடிகரான சத்யராஜ் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும், இல்லையென்றால் 'பாகுபலி 2' படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்றும் கன்னட அமைப்புகள் சவால் விடுத்துள்ளன.
படத்தின் இயக்குனர் ராஜமௌலி கன்னடத்தில் பேசி படத்தை வெளியிட அனுமதியுங்கள் என்று கேட்டும் கூட கன்னட அமைப்புகள் அவர் வேண்டுகோளை ஏற்க மாட்டோம் என்று சொல்லியிருக்கிறார்கள். மேலும் வாட்டாள் நாகராஜ் காவிரி எங்களுக்கே சொந்தம், தமிழ்நாட்டிற்கு எப்போதுமே தண்ணீர் தர மாட்டோம் என்று இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசி வருகிறார்.
நடிகர் சங்கம் இந்த விவகாரத்தில் இதுவரை எந்தவிதமான குரலையும் கொடுக்கவில்லை. இத்தனைக்கும் நடிகர் சங்கத்தின் தலைவராக இருக்கும் நாசர், 'பாகுபலி 2' படத்தில் சத்யராஜுடன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நடிகர் சங்கச் செயலாளராக இருக்கும் விஷால், தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் இருக்கிறார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நடிகரை எதிர்த்து கர்நாடகாவில் இன்று பந்த் நடத்த முடிவெடுத்துள்ள நிலையில் எதற்கும் குரல் கொடுக்கும் கமல்ஹாசன், தேவைப்படும் போது குரல் கொடுக்கும் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலகத்தைச் சார்ந்தவர்கள் கூட அமைதியாக இருக்கிறார்கள்.