மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தனுஷ் தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த வருடம் தொடங்கப்பட்ட படம் வடசென்னை. தனுஷ் உடன், அமலாபால், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, இயக்குநர் சுப்பிரமணிய சிவா ஆகியோர் நடிப்பில் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் வட சென்னை படத்தை தயாரித்து வருகிறது. வடசென்னை படத்தை ஒரே கட்டமாக எடுக்க திட்டமிட்டனர். ஆனால் கடந்த வரும் படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே நிறுத்தப்பட்டது.
அந்தப் படத்துக்கு ஒதுக்கிய தேதிகளை வைத்து ப.பாண்டி படத்தை இயக்கினார் தனுஷ். அதோடு, வேலையில்லா பட்டதாரி 2 படத்திலும் நடித்துள்ளார். வட சென்னை படப்பிடிப்பு பாதியோடு நிறுத்தப்பட்டதற்கு என்ன காரணம் என்று வெளிப்படையாக சொல்லாமல் அமைதிகாத்தனர். வட சென்னை கதையில் முழு திருப்தி வராததினால் தனுஷ்தான் படப்பிடிப்பை நிறுத்தச் சொன்னதாக ஒரு தகவல் கசிந்தது.
இந்நிலையில், வடசென்னை படப்பிடிப்பு தாமதம் ஏன் என்று முதன் முறையாக வாய் திறந்திருக்கிறார் வெற்றிமாறன். 'விசாரணை படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டதால் அதற்காக தயாராக வேண்டும் என தனுஷிடம் நான் தான் கேட்டேன். பெருந்தன்மையாக தனுஷ் ஒப்புக்கொண்டார். அந்த தேதிகளை வீணடிக்க வேண்டாம் என்று தான் மற்ற இரண்டு படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்" என தெரிவித்துள்ளார் வெற்றிமாறன்.
தனுஷ் நடிப்பில் இதுவரை உருவான படங்களைவிட, இரண்டு மடங்கு பட்ஜெட்டில் வடசென்னை படம் உருவாகிறது. அதனாலேயே இரண்டு பாகமாக எடுக்க திட்டமிட்டுள்ளனர்.