ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நாளை முதல் ஆரம்பமாக உள்ளது. இன்றுடன் அனைத்துப் பள்ளிகளையும் மூடிவிட வேண்டும் என அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. நாளை முதல் வீட்டிலுள்ள குட்டீஸ்கள் அனைவருக்கும் கொண்டாட்டம் தான். ஆனால், திரைப்படங்களை விரும்பிப் பார்க்கும் குழந்தைகளைத் திருப்திப்படுத்தத்தான் புதிய படங்களின் வெளியீடு பெரிதாக இல்லை.
நாளை “இலை, நகர்வலம், ஆவிப் பெண்” ஆகிய மூன்று படங்கள்தான் வெளியாகின்றது. மூன்று படங்களைப் பற்றியும் இதற்கு முன் எந்த செய்தியாவது வந்திருந்தால் அது ஆச்சரியம்தான். இப்படி எந்த ஒரு கவனிப்புமே இல்லாமல்தான் நாளை இந்தப் படங்கள் வெளியாக உள்ளன.
அடுத்த வாரம் 'பாகுபலி 2' படம் மட்டுமே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேறு படங்கள் வருவதற்கான சூழல் அதிகமாக இல்லை. கடந்த வாரம் வெளிவந்த படங்களில் 'ப. பாண்டி' படம் மட்டும் தாக்குப் பிடித்து அடுத்த வாரம் வரை ஓடும் என்கிறார்கள்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், விக்ரம், சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், தனுஷ், விஷால், ஆர்யா, சிம்பு, ஜீவா, ஜெயம் ரவி, மாதவன் என யாருடைய படங்களும் அடுத்த இரண்டு, மூன்று வாரங்களுக்கு வெளிவரப் போவதில்லை என்பது மட்டும் உறுதியான விஷயம்.
இருக்கும் சிறிய படங்கள் வெளிவருவதற்கு இதுதான் சரியான நேரம். யார் யார் பயன்படுத்திக் கொள்ளப் போகிறார்களோ ?.