Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தயாரிப்பாளர்களுக்கு சம்பாதித்து கொடுத்துவிட்டு பணத்தை சேருங்கள்: நடிகர்களுக்கு கே.பாக்யராஜ் அறிவுரை

20 ஏப், 2017 - 12:05 IST
எழுத்தின் அளவு:
K-bhagyaraj-advices-to-actors

முதன் முதலாக தமிழ் படத்தை திரையிட்டவரும், முதல் தியேட்டர் கட்டியவருமான சாமிக்கண்ணு வின்செண்ட்டின் பிறந்த நாளையட்டி சென்னை கமலா தியேட்டரில் தியேட்டர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்டு கே.பாக்யராஜ் பேசியதாவது:


வின்செண்ட் சாமிக்கண்ணுவைக் கொண்டாடும் இந்த நல்ல நிகழ்ச்சிக்கு குறைவான கூட்டமே வந்திருந்தாலும், ஒவ்வொருவரும் நிறைவான மனதுடன் வந்திருப்பது தான் சிறப்பு. நேர்மை, பாராட்டு வாங்கிக் கொடுக்கும் ஆனால், பட்டினி போட்டுவிடும். அதேசமயம் நேர்மையாக சினிமா கொடுத்தால் என்றைக்காவது பலன் கிடைக்கும். அந்தக்காலத்தில் கிராமங்களில் இரண்டுபேரைத் தான் ஹீரோவாகக் கொண்டாடுவார்கள். ஒருவர் மின்வாரிய ஊழியர் பீஸ் போடுபவர், இன்னொருவர் தியேட்டர் ஆப்ரேட்டர். அந்த அளவுக்கு ஆப்ரேட்டரை சினிமாவைக் கண்டுபிடித்தவர் என்கிற ரேஞ்சுக்குக் கொண்டாடுவார்கள்.


வெள்ளக்கோவிலில் இருந்து கோபிக்குச் சைக்கிளில் சென்று படம் பார்த்த தருணங்கள் நினைவுக்கு வருகிறது. அந்த கிராமத்தில் இருந்து ஈரோடு போய்ட்டு வந்தாலே அதிசயமாகப் பார்ப்பார்கள். தப்பித் தவறி மெட்ராஸ் போயிட்டு வந்தவர்களை உட்கார வைத்து கடல் பார்த்தியா, கப்பல் பார்த்தியா என்று கேட்டுவிட்டு கடைசியாக எம்ஜிஆர் - சிவாஜி பார்த்தியா என்று கேட்பார்கள். பார்க்கவில்லையென்று சொன்னால் அடப்போப்பா என்று சலித்துக் கொள்வார்கள். அந்த அளவுக்கு சினிமா தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. எதுவுமே தெரியாத எங்க ஊர்க்காரர்கள் இன்று டிஸ்கவரி சேனல் பார்த்துக் கொண்டே டீக்கடையில் வடை சுட்டுக் கொண்டிருப்பார்கள். அந்த அளவிற்குச் சினிமா தான் அவர்களை மாற்றியிருக்கிறது.


திரைப்படத்துறையைப் பொறுத்தவரையில் எல்லோருமே ஒரே அணி தான். நடிகர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கட்டும், ஆனால், தயாரிப்பாளருக்கு சம்பாதித்துக் கொடுத்து விட்டு எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளட்டும். திரைப்படத்துறையின் வளர்ச்சிக்கு திரையரங்குகளின் பங்கு மகத்தானது. அந்த வகையில் இந்தப் பாரமரியத்தைத் தோற்றுவித்த வின்செண்ட் சாமிக்கண்ணுவை நன்றியுடன் நினைத்துப் பார்த்துக் கொள்கிறேன். அவரது நினைவாகத் திரையரங்க தினம் கொண்டாடப்படுவது மிகவும் பொருத்தமான ஒன்று.


இவ்வாறு கே.பாக்யராஜ் பேசினார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in