இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
முதன் முதலாக தமிழ் படத்தை திரையிட்டவரும், முதல் தியேட்டர் கட்டியவருமான சாமிக்கண்ணு வின்செண்ட்டின் பிறந்த நாளையட்டி சென்னை கமலா தியேட்டரில் தியேட்டர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்டு கே.பாக்யராஜ் பேசியதாவது:
வின்செண்ட் சாமிக்கண்ணுவைக் கொண்டாடும் இந்த நல்ல நிகழ்ச்சிக்கு குறைவான கூட்டமே வந்திருந்தாலும், ஒவ்வொருவரும் நிறைவான மனதுடன் வந்திருப்பது தான் சிறப்பு. நேர்மை, பாராட்டு வாங்கிக் கொடுக்கும் ஆனால், பட்டினி போட்டுவிடும். அதேசமயம் நேர்மையாக சினிமா கொடுத்தால் என்றைக்காவது பலன் கிடைக்கும். அந்தக்காலத்தில் கிராமங்களில் இரண்டுபேரைத் தான் ஹீரோவாகக் கொண்டாடுவார்கள். ஒருவர் மின்வாரிய ஊழியர் பீஸ் போடுபவர், இன்னொருவர் தியேட்டர் ஆப்ரேட்டர். அந்த அளவுக்கு ஆப்ரேட்டரை சினிமாவைக் கண்டுபிடித்தவர் என்கிற ரேஞ்சுக்குக் கொண்டாடுவார்கள்.
வெள்ளக்கோவிலில் இருந்து கோபிக்குச் சைக்கிளில் சென்று படம் பார்த்த தருணங்கள் நினைவுக்கு வருகிறது. அந்த கிராமத்தில் இருந்து ஈரோடு போய்ட்டு வந்தாலே அதிசயமாகப் பார்ப்பார்கள். தப்பித் தவறி மெட்ராஸ் போயிட்டு வந்தவர்களை உட்கார வைத்து கடல் பார்த்தியா, கப்பல் பார்த்தியா என்று கேட்டுவிட்டு கடைசியாக எம்ஜிஆர் - சிவாஜி பார்த்தியா என்று கேட்பார்கள். பார்க்கவில்லையென்று சொன்னால் அடப்போப்பா என்று சலித்துக் கொள்வார்கள். அந்த அளவுக்கு சினிமா தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. எதுவுமே தெரியாத எங்க ஊர்க்காரர்கள் இன்று டிஸ்கவரி சேனல் பார்த்துக் கொண்டே டீக்கடையில் வடை சுட்டுக் கொண்டிருப்பார்கள். அந்த அளவிற்குச் சினிமா தான் அவர்களை மாற்றியிருக்கிறது.
திரைப்படத்துறையைப் பொறுத்தவரையில் எல்லோருமே ஒரே அணி தான். நடிகர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கட்டும், ஆனால், தயாரிப்பாளருக்கு சம்பாதித்துக் கொடுத்து விட்டு எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளட்டும். திரைப்படத்துறையின் வளர்ச்சிக்கு திரையரங்குகளின் பங்கு மகத்தானது. அந்த வகையில் இந்தப் பாரமரியத்தைத் தோற்றுவித்த வின்செண்ட் சாமிக்கண்ணுவை நன்றியுடன் நினைத்துப் பார்த்துக் கொள்கிறேன். அவரது நினைவாகத் திரையரங்க தினம் கொண்டாடப்படுவது மிகவும் பொருத்தமான ஒன்று.
இவ்வாறு கே.பாக்யராஜ் பேசினார்.