டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் |
பாகுபலி 2 திரைப்படம் அடுத்த வாரம் 28ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் என பலரும் வசித்து வருகிறார்கள். குறிப்பாக மாநிலத் தலைநகரான பெங்களூருவில் அதிகம் வசிக்கிறார்கள். அதனால் பெங்களூருவில் கன்னடப் படங்களை விட தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய படங்கள் அதிகம் வெளியாகும். பொதுவாகவே தமிழர்களை தங்களது விரோதிகளாகப் பார்க்கும் கன்னட அமைப்புகள் பிரச்சனையை ஏற்படுத்த வேறு எந்த காரணமும் சிக்காததால் பாகுபலி 2 படத்தைக் கையில் எடுத்துக் கொண்டுள்ளார்கள்.
காவிரி பிரச்சனை 8 வருடங்களுக்கு முன்பு தீவிரமாக இருந்த போது தமிழ்த் திரையுலகம் சார்பில் கண்டன ஊர்வலம், ஆர்பாட்டம் போன்றவை நடந்தன. அப்போது சத்யராஜ் பேசிய பேச்சுகளுக்கு இத்தனை வருடங்கள் கழித்து கன்னட அமைப்புகள் பிரச்சனை செய்கின்றன. அதனால், சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள பாகுபலி 2 படத்தை கர்நாடகாவில் திரையிட மாட்டோம் என்றும் சத்யராஜ் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறி வருகிறார்கள். அதனால், பாகுபலி 2 படம் வெளியாகும் ஏப்ரல் 28ம் தேதி பந்த்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்கள். அதனால் அன்றைய தினம் கர்நாடகாவில் பாகுபலி 2 வெளியாவது மேலும் சிக்கலுக்குள்ளாகி இருக்கிறது.
இது பற்றி தன்னுடைய வருத்தத்தைப் பகிர்ந்துள்ளார் பாகுபலி 2 படத்தின் இயக்குனர் ராஜமௌலி.
“சத்யராஜுடன் நான் கடந்த 5 வருடங்களாக பணியாற்றி வருகிறேன். அவர் யாரையும் புண்படுத்தும் குணம் கொண்டவர் இல்லை. இது பற்றி நாங்கள் விசாரித்த போது 9 வருடங்களுக்கு முன்பு சத்யராஜ் பேசிய பேச்சு என்றார்கள். அதன் பின் அவர் நடித்த 30 படங்கள் கர்நாடகாவில் வெளியாகிவிட்டது. பாகுபலி படத்தின் முதல் பாகமும் வெளியாகியுள்ளது. அதற்கெல்லாம் யாரும் எந்தப் பிரச்சனையும் செய்யவில்லை. ஆனால், இப்போது திடீரென இந்த விவகாரத்தை தோண்டி எடுப்பது சரியல்ல, சத்யராஜ் மீதுள்ள கோபத்தை பாகுபலி 2 மீது காட்டுவது சரியல்ல, படம் வெளியாக ஒத்துழைப்பு தாருங்கள் எனக் கருத்துத் தெரிவித்துள்ளார்.
பாகுபலி 2 குழுவினர் 5 வருடங்களாக தங்களுடன் இருந்த சத்யராஜுக்கு ஆதரவாக இருப்பார்களா?, அல்லது சத்யராஜை பகிரங்க மன்னிப்பு கேட்க வைத்து தங்களது படத்தை வெளியிடும் முனைப்புகளில் இறங்குவார்களா என்பது சில நாட்களில் தெரிந்துவிடும்.