தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தூங்கா நகரம், சிகரம் தொடு படங்களை இயக்கிய கெளரவ் நாராயணன் தற்போது உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன் நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இதனை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் பாடல் காட்சிக்காக படக்குழு ஓமன் நாட்டிற்கு சென்றுள்ளது. அங்கு கடந்த ஒரு வாரமாக பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் படக்குழுவினரை ஓமன் நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் மர்வான் யூசுப் திடீரென சந்தித்தார். ஒரு நாட்டின் அமைச்சர் படக்குழுவை தேடி வந்து சந்தித்ததால் படக்குழுவினர் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். அவருக்கு எடுக்கப்பட்ட பாடல் காட்சிகளை இயக்குனர் கவுரவ் போட்டு காட்டினார். "எங்கள் நாட்டை மிகவும் அழகாக படம்பிடித்துள்ளீர்கள்" என்று பாராட்டியதோடு "எங்கள் நாட்டில் அழகான இடங்கள் இருக்கிறது. எங்கள் நாட்டுக்கு படப்பிடிப்பு நடத்த வாருங்கள். உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்கிறோம்" என்று கவுரவ் மூலமாக தமிழ் பட இயக்குனர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.