தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ்நாட்டுக்குள் இந்தி டப்பிங் சீரியல்களில் ஆதிக்கம் அதிகரித்து விட்டதைத் தொடர்ந்து அதற்கு எதிராக சின்னத்திரை கலைஞர்கள் போராட்டங்கள் நடத்தினர். ஆனபோதும் தமிழ் சேனல்களில் இந்தி டப்பிங் சீரியல்கள் ஒளிபரப்பப்படுவது நிறுத்தப்படவில்லை. நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்தான் உள்ளது. அதன்காரணமாக, இந்தி சீரியல்கள் பக்கம் திரும்பியுள்ள தமிழ் சீரியல் நேயர்களை இழுக்கும் முயற்சியாக தற்போது சில சீரியல்கள் பிரமாண்டமாக தயாராகத் தொடங்கியிருக்கிறது.
அதன்முதல்கட்டமாக, நான்கு மொழிகளில் குஷ்பு தயாரித்து வரும் நந்தினி சீரியலைத் தொடர்ந்து தற்போது ஜீ தமிழ் சேனலில் யாரடி நீ மோகினி என்றொரு நெடுந்தொடர் தயாராகி வருகிறது. கிராமத்து கதையில் உருவாகும் இந்த தொடருக்காக சென்னையில் பிரமாண்டமாக செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. மேலும், இந்தி சீரியலுக்கு இணையாக இந்த தொடரில் காஸ் டியூம்களும் ரிச்சாக பயன்படுத்தப்படுகிறதாம். ஏப்ரல் 24-ந்தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கும் இந்த தொடரில் திருமதி தமிழ் தொடரில் நடித்த சஞ்சய் நாயகனாக நடிக்க, அவருடன் பிரபல நடிகர் -நடிகைகள் நடித்துக்கொண்டிருக்கிறார்கள்.