டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்புடன் டிடி நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் சிவகார்த்திகேயன், 2-வது வாரத்தில் ஆர்யா, 3-வது வாரத்தில் விஜய்சேதுபதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட நிலையில், வருகிற சனிக்கிழமை நடிகை ரேவதி கலந்து கொள்கிறார். அந்த எபிசோடின் படப்பிடிப்பு நேற்று சென்னையிலுள்ள பிரசாத் ஸ்டுடியோவில் போடப்பட்டுள்ள செட்டில் படமாக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ராஜ்கிரண்-ரேவதி ஆகிய இருவரும்தான் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் ராஜ்கிரணுக்கு உடல்நிலை சரியில்லாதததால் அவர் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவித்தனர். மேலும், வெளியில் தெரியாமல் சமூக சேவை செய்து வரும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது வெளிச்சம் போட்டுகாட்டும் இந்த நிகழ்ச்சியில், அடுத்தடுத்து இன்னும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வகையில் பொதுநலம் கொண்ட சாமானியர்களை வெளிச்சத்துக் கொண்டு வருகிறார்களாம். இந்த நிகழ்ச்சியில் என்னதான் திரை பிரபலங்கள் கலந்து கொண்டபோதும் சமூக சேவையாற்றும் நபர்களை முன்னிறுத்திதான் இந்த நிகழ்ச்சி நடத்துப்படுமாம். அதோடு, 13 எபிசோடு இதே பாணியில் செல்ல, அதற்கடுத்து இன்னும் புதிய கோணத்தில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளதாம்.