சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |
மணிரத்னம் எப்போது 'தாலி சென்டிமென்ட்டை' வைத்து குடும்பப் படங்களை எடுத்திருக்கிறார் என கேள்வி கேட்பவர்களுக்கு தற்போது சமூக வலைத்தளங்களில் உலவி வரும் பதிவைப் பார்த்தால் வாயை மூடிக் கொள்வார்கள். இளமை ததும்பும் படங்களை எடுப்பவர் மணிரத்னம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இளமையான காதல் படமாக இருந்தாலும் மணிரத்னம் படத்தில் குடும்பங்களுக்கும் முக்கியத்துவம் இருக்கும். அவருடைய அனைத்துப் படத்திலும் காதல் எந்த அளவிற்கு இருக்கிறதோ அதே அளவிற்கு சென்டிமென்ட்டும் இருக்கும்.
'காற்று வெளியிடை' படம் மணிரத்னம் இதுவரை எடுத்த படங்களிலேயே மிகச் சுமாரான படம் என விமர்சனங்கள் அதிகம் வந்தன. எவ்வளவு நாளைக்குத்தான் அவரை அரைத்த மாவையே அரைப்பார் என பலரும் கேள்வி எழுப்பினார்கள். அதோடு நின்றால் பரவாயில்லை, சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள், பதிவுகள் என பரபரப்பை ஏற்படுத்திவிட்டார்கள்.
இன்று நம் கண்ணில் பட்ட ஒன்று மணிரத்னத்தின் முந்தைய படங்களையும் 'தாலி சென்டிமென்டையும் பற்றி குறிப்பிட்டு இருந்தது. எந்த அளவிற்கு நம் ரசிகர்கள் படங்களை கவனிக்கிறார்கள் என்பதை இயக்குனர்கள் புரிந்து கொண்டால் சரி. அந்த பதிவு இதுதான்...
தாலிகட்டாம அடுத்தவ கூட வாழ்ந்து குழந்தை பெத்துகிட்டா - அக்னி நட்சத்திரம்.
தாலிகட்டாம குழந்தை பெத்து கூட்ஸ்ல வீசினா - தளபதி.
தாலி கட்டியும் வாழாமல் இருந்தா - மௌன ராகம்
தாலி கட்டி வாழ்ந்தா - அலை பாயுதே.
தாலி கட்டாம வாழ்ந்தா - ஓ காதல் கண்மணி.
தாலிகட்டாம குழந்தை பெத்துகிட்டா- காற்று வெளியிடை.
அடுத்து.... மணிரத்தினம் சார்...?