தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழில் கமல்ஹாசனுடன் ஆளவந்தான் படத்தில் நடித்த ரவீணா டாண்டனை அவ்வளவு ஈஸியாக யாரும் மறந்திருக்க மாட்டார்கள். தமிழில் இரண்டு படங்களில் தான் இவர் நடித்தார் ஆனால் பாலிவுட்டில் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது மாத்தர் என்ற படத்தில் நடித்துள்ளார். பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் புரொமோஷனில் பிஸியாக இருந்த ரவீணா, நமக்கு அளித்த சிறப்பு பேட்டி இதோ...
மாத்தர் படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது, இதை எப்படி பார்க்கிறீர்கள்.?
மிகவும் சந்தோஷமாக உள்ளது. மாத்தர் படத்தின் டிரைலரை அனைவரும் பாராட்டுகிறார்கள். ரசிகர்கள் மட்டுமல்ல திரைத்துறையில் இருப்பவர்கள் கூட பாராட்டினார்கள். இது எனக்கு நம்பிக்கை அளிக்கிறது. அனைவரும் இந்தப்படத்தை ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்.
மாத்தர் படம் என்ன சொல்ல போகிறது.?
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டவர்களின் வாழ்கையின் வலியை சொல்ல போகிறோம். குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் ரோட்டில் எப்படி சுதந்திரமாக சுற்றி திரிகிறார்கள், நம் நாட்டில் சட்டங்கள் எந்தளவுக்கு குறைபாடுடன் இருக்கிறது. சராசரி மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள், சாமானியனுக்கு நீதி கிடைக்காமல் இருப்பது, அதனால் அவர்களே சட்டத்தை கையில் எடுத்து பழிவாங்குவது உள்ளிட்ட பல விஷயங்களை சொல்ல இருக்கிறோம். அதேசமயம் சினிமாவில் தான் பாதிக்கப்பட்டவன் பழிவாங்க சட்டத்தை கையில் எடுக்கிறான், நிஜ வாழ்க்கையில் பெரும்பாலும் அப்படி நடப்பது கிடையாது.
இதுபோன்ற சமூக படங்களுக்கு பாராட்டு கிடைத்தாலும் வசூல் கிடைப்பதில்லையே, இது பற்றி உங்கள் கருத்து என்ன.?
சரியாக சொன்னீர்கள், நீங்கள் சொல்வது கசப்பான உண்மை தான். இதுபோன்ற படங்களுக்கு நிறைய பாராட்டுகள் கிடைக்கின்றன. ஆனால் இப்படிப்பட்ட படங்களை நம் நாட்டு மக்கள் விரும்பி பார்ப்பது கிடையாது. தயவு செய்து இது மாதிரியான சமூக படங்களை பாருங்கள், அப்போது தான் அதிகளவில் சமூக படங்கள் வர ஊக்கம் அளிக்கும். இந்தப்படத்தை பார்ப்பவர்கள் நம் சமூகத்தில் இப்படி தான் நடக்கிறது என்ற உண்மையை நிச்சயம் புரிந்து கொள்வார்கள்.
நம் நாட்டில் சட்டங்களை மாற்ற வேண்டும் என்று நினைக்கிறீர்களா...?
என்னைப் பொறுத்தமட்டில் சட்ட திட்டங்களை மாற்ற வேண்டும் என்று தான் நினைக்கிறேன். 70 ஆண்டுக்கு முந்தைய சட்டத்தை பின்பற்றி வருகிறோம். இன்றைக்கு உள்ள காலக்கட்டத்திற்கு ஏற்றபடி சட்டங்களை மாற்ற வேண்டும். குற்றவாளிகள் சட்டத்தில் இருக்கும் ஓட்டையை கண்டுபிடித்து அதன்மூலம் தாங்கள் குற்றவாளி அல்ல என்று நிரூபித்து சமூகத்தில் சுதந்திரமாக சுற்றி திரிகிறார்கள். அதனால் தான் பெண்களுக்கு எதிரான பாலியல் தொடர்பான குற்றங்கள் மற்றும் வன்முறைகள் அதிகளவில் நடைபெறுகின்றன. ஆகவே சட்டங்களை மாற்றும் வரையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிச்சயம் குறையாது.
நீங்கள் எப்போது படம் இயக்குவீர்கள்.?
படம் இயக்குவது என்பது சாதாரண விஷயம் அல்ல, ஒரு குழந்தையை பெற்று எடுப்பது போன்றது. இயக்குநராக மாறிவிட்டால் அதற்காக 24 மணிநேரமும் உழைக்க வேண்டும். என்னால் அப்படி இருக்க முடியாது. குழந்தை, குடும்பம் போன்றவற்றை பார்க்க வேண்டி இருக்கிறது. ஆகவே எனது குழந்தைகள் வளர்ந்த பிறகு வேண்டுமானால் நான் படம் இயக்க வாய்ப்பிருக்கிறது.
இவ்வாறு ரவீணா கூறியுள்ளார்.